மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

இந்தியா, சிறிலங்காவில் ஐஎஸ் அமைப்பின் தடங்கள் கண்டுபிடிப்பு

ஈராக் மற்றும் சிரியாவில் தமது செல்வாக்கு வெகுவாக குறைந்து விட்டதால், இந்தியா, சிறிலங்கா, துருக்கி, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் ஐ.எஸ் பயங்கரவாதக் குழு காலடி எடுத்து வைத்துள்ளதாக,  ஹிந்துஸ்தான் ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கோத்தாவின் நெருங்கிய சகாவுக்கு இராணுவத் தளபதி பதவி? – இன்று முக்கிய அறிவிப்பு

சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க நாளையுடன் ஓய்வுபெறவுள்ள நிலையில், புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்படவுள்ளார் என உயர்மட்ட வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அமெரிக்க குடியுரிமை துறப்பு பட்டியலில் கோத்தாவின் பெயர் இல்லை

அமெரிக்க குடியுரிமையை துறந்தவர்களின் புதிய பட்டியலிலும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்வின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிபர் தேர்தலில் போட்டியிடத் தயார் – சரத் பொன்சேகா

ஐக்கிய தேசியக் கட்சி  தலைமையிலான கூட்டணியினால், தனது  பெயர் முன்மொழியப்பட்டால், அதிபர் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருப்பதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா  தெரிவித்தார்.

காஷ்மீர் நிலவரங்கள் குறித்து மகிந்தவுக்கு விளக்கிய பாகிஸ்தான் தூதுவர்

சிறிலங்காவுக்கான பாகிஸ்தான் தூதுவர் மேஜர் ஜெனரல் ஷாஹிட் அஹமட் ஹஷ்மத், சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சலைச் சந்தித்து, ஜம்மு- காஷ்மீர் நிலைமைகள் தொடர்பாக,  விளக்கமளித்துள்ளார்.

சிறிலங்கா படைகளுக்கு அவமானம் – சரத் பொன்சேகா

சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொடவுக்கும், முன்னாள் விமானப்படைத் தளபதி றொஷான் குணதிலகவுக்கும் அளிக்கப்பட்டுள்ள உயர் பதவிகள்  பாதுகாப்பு படையினருக்கு அவமானம் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் நாளை மறுநாள் சிறிலங்காவுக்குப் பயணம்

மத அல்லது நம்பிக்கை சுதந்திரம் தொடர்பான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் அகமட் ஷகீட் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் அறிவித்துள்ளது.

சோபா குறித்து மாரப்பனவுடன் பேசினாரா அலிஸ் வெல்ஸ்?

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பதில் உதவி இராஜாங்கச் செயலர் அலிஸ் வெல்ஸ் நேற்று சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இலங்கையர்கள் எதேச்சாதிகாரியை விரும்புகின்றரா? – ரொய்ட்டர்ஸ்

250 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட  ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களை தடுக்க முடியாத அரசாங்கத்தின் இயலாமையினால்,  கோபமடைந்த இலங்கையர்கள், தங்கள் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளித்து, பொருளாதார வளர்ச்சியை மீண்டும் கொண்டு வரக்கூடிய, வலிமைமிக்க ஒருவர் மீண்டும் அதிகாரத்துக்கு வருவதை விரும்புகிறார்கள்.

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட அமெரிக்கா துணை நிற்கும் – அலிஸ் வெல்ஸ்

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு சிறிலங்கா மற்றும் உலகெங்கிலும் உள்ள பங்காளர்களுடன் இணைந்து அமெரிக்கா தொடர்ந்து பணியாற்றி வருவதாக தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பதில் உதவி இராஜாங்கச் செயலர் அலிஸ் வெல்ஸ் தெரிவித்துள்ளார்.