மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம் – சிறிலங்காவுக்கு சுனாமி ஆபத்து இல்லை

இந்தோனேசியாவின் சுமாத்ரா கடலில் இன்று மாலை ஏற்பட்ட 7.9 அளவுடைய பாரிய நிலநடுக்கத்தினால், சிறிலங்காவில் சுனாமி ஏற்படும் ஆபத்து இல்லை என்று சிறிலங்காவின் அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

எட்காவுக்கும் இந்தியாவின் நோயாளர் காவுவண்டிச் சேவைக்கும் தொடர்பில்லை – ஹர்ஷ டி சில்வா

இந்தியாவுடன் செய்து கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள பொருளாதார மற்றும் தொழில்நுட்ப கூட்டு உடன்பாட்டுக்கும் (எட்கா), விரைவில் இந்தியாவினால் தொடங்கப்படவுள்ள நோயாளர் காவு வண்டிச் சேவைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

இலங்கைத் தீவைச் சுற்றி 28 துறைமுக நகரங்களைக் கட்ட சீனா விருப்பம்

இலங்கைத் தீவைச் சுற்றி 28 துறைமுக நகரங்களை நிர்மாணிக்க சீனா விருப்பம் தெரிவித்திருப்பதாக, இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சமஸ்டியை வழங்குமாறு சிறிலங்காவிடம் கோர மறுத்தார் ராஜீவ் காந்தி – வரதராஜப்பெருமாள்

சமஸ்டி அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என்றோ, 13ஆவது அரசியலமைப்புத் திருத்தச்சட்ட வரைவதிலோ அல்லது அதனை நடைமுறைப்படுத்துமாறோ சிறிலங்கா அரசாங்கத்தை, இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி கேட்கவில்லை என்று தெரிவித்துள்ளார் வட-கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் அ.வரதராஜப்பெருமாள்.

காணிகளை விரைவாக ஒப்படைக்க வலியுறுத்துகிறது அமெரிக்கா – கூட்டறிக்கையில் இணக்கம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பரிந்துரைகளை சிறிலங்கா நடைமுறைப்படுத்துவதற்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ள அமெரிக்கா, சிறிலங்கா படையினர் வசமுள்ள தனியார் காணிகளை உரிமையாளர்களிடம் விரைவாக ஒப்படைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

கொழும்பில் மற்றொரு அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உயர் அதிகாரி

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மற்றொரு உயர் அதிகாரி சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் முகாமைத்துவத்துக்குப் பொறுப்பான அடிநிலைச் செயலரான பற்றிக் கென்னடி என்ற உயர் அதிகாரியே சிறிலங்கா வந்துள்ளார்.

சிறிலங்கா பயணம் குறித்து 31ஆவது கூட்டத்தொடரில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மௌனம்

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் அண்மையில் சிறிலங்காவுக்கு மேற்கொண்ட பயணம் தொடர்பாக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இன்று நிகழ்த்திய உரையில் எதுவும் குறிப்பிடாமல் மௌனம் காத்துள்ளார்.

அனைத்துலக செஞ்சிலுவை சங்கங்களின் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் சிறிலங்கா வருகிறார்

அனைத்துலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கங்களின் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் எல்ஹாட்ஜ் அஸ் சை மூன்று நாள் அதிகாரபூர்வ பயணமாக நாளை சிறிலங்காவுக்கு வரவுள்ளார்.

சிறிலங்கா கடற்படையில் இருந்து லெப்.யோசித ராஜபக்ச இடைநிறுத்தம்

நிதிமோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, லெப்.யோசித ராஜபக்ச சிறிலங்கா கடற்படையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

லசந்த படுகொலை – 40 இராணுவப் புலனாய்வு அதிகாரிகளிடம் விசாரணை

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பாக, சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 40இற்கும் அதிகமான அதிகாரிகளிடம் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.