மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

சிறிலங்காவுடனான இராணுவ ஒத்துழைப்பு நட்பு, நம்பிக்கையின் அடிப்படையிலானது – ரஸ்யா

சிறிலங்காவுக்கும் ரஸ்யாவுக்கும் இடையிலான நீண்டகால உறவுகள், மக்கள் மற்றும் ஆயுதப்படைகளுக்கிடையிலான நம்பிக்கை மற்றும் உண்மையான நட்புறவை அடிப்படையாகக் கொண்டது என்று ரஸ்யா தெரிவித்துள்ளது.

ஒரு சில நாடுகளுடன் மட்டும் உறவை வைத்துக் கொண்டு முன்னேற முடியாது – சிறிலங்கா அரசு

முன்னைய அரசாங்கம் பதவியில் இருந்த போது சிறிலங்காவை எதிர்த்த நாடுகள் உள்ளடங்கலாக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் அனைத்தும் தமக்குப் பக்கபலமாக இருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தார் நடேசன் – நேரில் கண்ட பெண் இரகசிய சாட்சியம்

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் உள்ளிட்ட சுமார் 150 பேரை பேருந்தில் சிறிலங்கா படையினர் ஏற்றிச் சென்றதை தாம் கண்டதாக பெண் ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார்.

ரணிலின் சீனப் பயணத்தின் போது துறைமுக நகரத் திட்டம் குறித்த அறிவிப்பு

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கி்ரமசிங்கவின் சீனப் பயணத்தின் போது, கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை மீள ஆரம்பிப்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறிலங்காவில் இந்தியாவை முந்தியது சீனா

சிறிலங்காவுக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டவர்கள் வரிசையில் முன்னிலையில் இருந்த இந்தியாவை வீழ்த்தி சீனா அந்த இடத்தைப் பிடித்துள்ளது.

சிறிலங்காப் பிரதமரை எதிர்பார்த்திருக்கும் சீனா – வளைத்துப் போடத் தயாராகிறது

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பீஜிங் பயணத்தை சீனத் தலைவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக, சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா அமைச்சர்கள் மலிக் சமரவிக்கிரம மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

நல்லிணக்கத்துக்கு தெற்கிலுள்ளவர்களின் மனோநிலை மாற வேண்டும் – சிறிலங்கா அதிபர்

சிறிலங்காவில் நல்லிணக்கத்தை உருவாக்க தென்பகுதியில் உள்ள மக்களின் மனோநிலையில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பிரதமர், அமைச்சர்களுடன் அமெரிக்க உயர் அதிகாரி பேச்சு

அமெரிக்க- சிறிலங்கா உறவுகளை முன்னேற்றுவது தொடர்பாகவும், இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும்,சிறிலங்கா பிரதமர் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அடிநிலைச் செயலர் பற்றிக் கென்னடி பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

கண்ணிவெடிகளை தடைசெய்யும் ஒட்டாவா பிரகடனத்தில் கையெழுத்திடுவதாக சிறிலங்கா அறிவிப்பு

கண்ணிவெடிகளைத் தடை செய்யும் ஒட்டாவா பிரகடனத்தில் கையெழுத்திடவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

அமெரிக்க காங்கிரஸ் வெளிவிவகாரக் குழுத் தலைவருடன் மங்கள சமரவீர பேச்சு

அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அமெரிக்க நாடாளுமன்ற வெளிவிவகாரக் குழுத் தலைவரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.