மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

கோத்தாவிடம் இரண்டு மணி நேரம் விசாரணை

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவிடம், சிறிலங்கா காவல்துறையின் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தியுள்ளனர்.

மைத்திரி தலைமையில் மீனவர்கள் விவகாரம் குறித்து விரிவான ஆலோசனை

நாளை மறுநாள் இந்தியா செல்லவுள்ள சி்றிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, மீனவர்கள் விவகாரம் தொடர்பான கருத்துக்களைக் கேட்டறிந்து கொள்வதற்காக, நேற்று அதிபர் செயலகத்தில் ஒரு கூட்டத்தைக் கூட்டியிருந்தார்.

மைத்திரியுடன் விக்னேஸ்வரன் சந்திப்பு – இனப்படுகொலைத் தீர்மானம் குறித்து விளக்கம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் நேற்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

யாழ்ப்பாணத்தில் 1000 ஏக்கர் உயர் பாதுகாப்பு வலயக் காணிகளை விடுவிக்க அமைச்சரவை அனுமதி

யாழ்ப்பாணத்தில் உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ள, பிரதேசத்தில் 1000 ஏக்கர் காணிகளை விடுவிக்க சிறிலங்கா அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

வடக்கு மாகாணசபையின் இனப்படுகொலைத் தீர்மானம் – கூட்டமைப்பு வரவேற்பு

போரின் போது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகள் குறித்து ஐ.நாவின் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும், குற்றவாளிகள் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்றும் வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.

இனப்படுகொலைத் தீர்மானம் – மைத்திரிக்கு ஏமாற்றமாம்

வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை குறித்த தீர்மானம் குறித்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.

பீல்ட் மார்சல் பதவியைக் கோரவில்லை, தந்தால் ஏற்பேன்- என்கிறார் ஜெனரல் பொன்சேகா

தன்னை பீல்ட் மார்சல் தரத்துக்கு பதவி உயர்த்துமாறு தாம் கோரவில்லை என்றும், அரசாங்கம் அந்தப் பட்டத்தை அளிக்க முன்வந்தால் ஏற்றுக் கொள்ளத் தயார் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா.

கோத்தா கறைபடுத்திய பாதுகாப்புச் செயலர் பதவி வேண்டாம் – சரத் பொன்சேகா

கோத்தாபய ராஜபக்சவின் கறைப்படுத்தப்பட்ட பாதுகாப்புச் செயலர் பதவியைத் தாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயக கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

முப்படைத் தளபதிகளையும் பதவிநீக்கம் செய்ய வேண்டும் – சரத் பொன்சேகா கோரிக்கை

தேர்தலுக்கு மறுநாள் அதிகாலையில் அலரி மாளிகையில் முன்னெடுக்கப்பட்ட சதித் திட்டத்துடன் தொடர்புடைய முப்படைகளினதும் தளபதிகளையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஜனநாயக கட்சியின் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளார்.

சிறிலங்காவுக்கு மீண்டும் வருகிறார் தென்னாபிரிக்கத் துணை அதிபர் சிறில் ரமபோசா

தென்னாபிரிக்க துணை அதிபர் சிறில் ரமபோசா மீண்டும் அடுத்த மாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சிறிலங்காவுக்கான தென்னாபிரிக்கத் தூதுவர்  ஜொவ் டொட்ஜ் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றிடம் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.