மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

சிறிலங்கா இராணுவக் கட்டமைப்பில் அதிரடி மாற்றம் – யாழ்., வன்னி, கிழக்கு படைத் தளபதிகளுக்கு இடமாற்றம்

புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், சிறிலங்கா இராணுவக் கட்டமைப்பில் பெரும் மாற்றங்கள் செய்யப்பட்டு, 15 மேஜர் ஜெனரல்கள் மற்றும் மூன்று பிரிகேடியர் தர அதிகாரிகள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

உலங்குவானூர்தி அணியை தென்சூடானுக்கு அனுப்புகிறது சிறிலங்கா

சிறிலங்காவில் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், ஐ.நா அமைதிப்படையில் சிறிலங்காப் படையினருக்கு கூடுதல் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் அழைப்பை நிராகரித்தார் பிரதம நீதியரசர் சிறீபவன்

உடுகம நீதிமன்றக் கட்டடத் தொகுதியைத் திறந்து வைக்க, அரசாங்கம் விடுத்த அழைப்பை உயர்நீதிமன்ற பிரதம நீதியரசர் சிறீபவன் நிராகரித்து விட்டதாக, நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் அதிகாரங்கள் பறிப்பு

சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவின் அதிகாரங்களை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன திடீரெனக் குறைத்துள்ளார்.

கட்சித் தலைவர்கள் வராததால் தேசிய நிறைவேற்றுக் குழுவில் எடுபடாத தமிழர் பிரச்சினை

தேசிய நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில், முக்கியமான அரசியல் தலைவர்கள் பங்கேற்காததால், தமிழர் பிரச்சினை குறித்து கடந்த வாரம் விவாதிக்கப்படவில்லை என்று, குழுவின் உறுப்பினர் ஒருவரை மேற்கோள்காட்டி ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

புதுடெல்லிக்குப் புறப்பட்டார் மைத்திரிபால சிறிசேன

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நான்கு நாள்  அதிகாரபூர்வ பயணமாக இன்று பிற்பகல் 2 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புதுடெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இன்று புதுடெல்லி செல்கிறார் சிறிலங்கா அதிபர் மைத்திரி

நான்கு நாள் அதிகாரபூர்வ பயணமாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சிறிலங்கன் விமான சேவையின், பயணிகள் விமானம் மூலமே, மைத்திரிபால சிறிசேன புதுடெல்லி செல்லவுள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் அதிரடி மாற்றங்கள் – தூக்கி வீசப்பட்டார் கருணா

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளராக முன்னாள் அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த நியமிக்கப்பட்டுள்ளார். இன்று நடந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கோத்தாவினால் துரத்தப்பட்ட 10 அதிகாரிகளை மீண்டும் இராணுவத்தில் சேர்க்க மைத்திரி உத்தரவு

முன்னைய ஆட்சிக்காலத்தில் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்ட பத்து சிறிலங்கா இராணுவ அதிகாரிகளை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ள, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

போர்க்குற்றவாளிகளைத் தண்டிக்க அரசு தயங்காது – இராஜதந்திரிகளுக்கு மைத்திரி உறுதிமொழி

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களைத் தண்டிக்க தமது அரசாங்கம் தயக்கம் காட்டாது என்று, வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, உறுதியளித்துள்ளார்.