மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

துறைமுக நகரத் திட்டத்தினால் சீனாவுடனான உறவை முறிக்க முடியாது – நாடாளுமன்றில் ரணில்

1.5 பில்லியன் டொலர் செலவில் கொழும்புத் துறைமுக நகரத்தை நிர்மாணிக்க சீனாவுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடு, அமைச்சரவை அனுமதியின்றி, சட்ட நடைமுறைகளுக்கு மாறாக மேற்கொள்ளப்பட்டது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரபாகரனின் செவ்வியுடன் வெளியான புரொன்ட்லைன் இதழ்களை விடுவிக்க ரணில் உத்தரவு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த புரொன்ட்லைன் இதழ்களை விடுவிக்குமாறு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

பிரபாகரனின் செவ்வியுடன் வெளியான புரொன்ட்லைன் இதழ் கொழும்பில் தடுத்து வைப்பு

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் செவ்வியை மறுபிரசுரம் செய்திருந்த, இந்தியாவின் புரொன்ட்லைன் சஞ்சிகை சிறிலங்காவில் சுங்க அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

ஐ.நா அறிக்கையை வெளியிடுவதில் பிரித்தானியா உறுதி

சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான, ஐ.நா விசாரணை அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என்பதில், பிரித்தானியா உறுதியாக இருப்பதாக, அந்த நாட்டின் வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இராஜாங்க அமைச்சர் ஹியூகோ ஸ்வயர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் புதிய இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் ரம்புக்பொத்த

சிறிலங்கா இராணுவத்தின்  புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் ஜெகத் ரம்புக்பொத்த நியமிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சிறிலங்கா இராணுவக் கட்டமைப்பில் அதிரடி மாற்றம் – யாழ்., வன்னி, கிழக்கு படைத் தளபதிகளுக்கு இடமாற்றம்

புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், சிறிலங்கா இராணுவக் கட்டமைப்பில் பெரும் மாற்றங்கள் செய்யப்பட்டு, 15 மேஜர் ஜெனரல்கள் மற்றும் மூன்று பிரிகேடியர் தர அதிகாரிகள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

உலங்குவானூர்தி அணியை தென்சூடானுக்கு அனுப்புகிறது சிறிலங்கா

சிறிலங்காவில் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், ஐ.நா அமைதிப்படையில் சிறிலங்காப் படையினருக்கு கூடுதல் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் அழைப்பை நிராகரித்தார் பிரதம நீதியரசர் சிறீபவன்

உடுகம நீதிமன்றக் கட்டடத் தொகுதியைத் திறந்து வைக்க, அரசாங்கம் விடுத்த அழைப்பை உயர்நீதிமன்ற பிரதம நீதியரசர் சிறீபவன் நிராகரித்து விட்டதாக, நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் அதிகாரங்கள் பறிப்பு

சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவின் அதிகாரங்களை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன திடீரெனக் குறைத்துள்ளார்.

கட்சித் தலைவர்கள் வராததால் தேசிய நிறைவேற்றுக் குழுவில் எடுபடாத தமிழர் பிரச்சினை

தேசிய நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில், முக்கியமான அரசியல் தலைவர்கள் பங்கேற்காததால், தமிழர் பிரச்சினை குறித்து கடந்த வாரம் விவாதிக்கப்படவில்லை என்று, குழுவின் உறுப்பினர் ஒருவரை மேற்கோள்காட்டி ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.