மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

சிறிலங்காவில் மூடப்படும் இரண்டு இந்திய வங்கிகள்

இரண்டு இந்திய வங்கிகள் சிறிலங்காவில் செயற்பாடுகளை நிறுத்திக் கொள்ளவுள்ளன. அக்சிஸ் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியனவே சிறிலங்காவில் உள்ள தமது கிளைகளை மூடவுள்ளன.

தூதுவர்கள் நாடு திரும்ப இரண்டு வார காலஅவகாசம்

வெளிநாடுகளில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் அரசியல் ரீதியான நியமனங்களைப் பெற்ற தூதுவர்கள் நாடு திரும்புவதற்கு வழங்கப்பட்டிருந்த காலஅவகாசம் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு வரலாற்று இடங்களில் ஆய்வு நடத்தவுள்ள புத்தசாசன அமைச்சு

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள வரலாற்று இடங்கள் குறித்த சிறப்பு ஆய்வு ஒன்றை நடத்தவுள்ளதாக, சிறிலங்காவின் பௌத்த சாசன மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

நேவி சம்பத் பிணையில் விடுதலை

கொழும்பில் 2008 / 09 காலப்பகுதியில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் முக்கிய சந்தேக நபராக குறிப்பிடப்படும், சிறிலங்கா கடற்படையின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான நேவி சம்பத் என அழைக்கப்படும், லெப்.கொமாண்டர்  சந்தன பிரசாத் ஹெற்றியாராச்சி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஏப்ரல் அல்லது மே மாதத்தில் இரண்டு தேர்தல்கள்

நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை தேர்தல்கள் 2020 ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறும் என்று  சிறிலங்கா தேர்தல்கள் ஆணையக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

ரிஷாத் பதியுதீனிடம் சிஐடியினர் விசாரணை

முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரிஷாத் பதியுதீனிடம், குற்ற விசாரணைத் திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்துள்ளனர்.

ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவசர அழைப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் இன்று முற்பகல், கட்சித் தலைமையகமான சிறிகொத்தாவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்புக்கு விமான சேவை – இந்தியா ஆர்வம்

மட்டக்களப்பு வரை விமான சேவைகளை விரிவாக்குவதற்கு இந்தியா ஆர்வம் காட்டுவதாக, சிறிலங்காவின் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ஐதேக தலைமையின் அனுமதியுடனேயே செய்தியாளர் சந்திப்பை நடத்தினார் ராஜித

ஐக்கிய தேசியக் கட்சி தலைவர்களின் அனுமதியுடனேயே, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, வெள்ளை வான் கடத்தல்கள் குறித்த செய்தியாளர் சந்திப்பை நடத்தியிருந்தார் என, ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட ராஜித சேனாரத்ன – மருத்துவமனையில் விளக்கமறியல்

வெள்ளை வான் கடத்தல்கள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பை ஒழுங்கு செய்தார் என்ற குற்றச்சாட்டில், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்று குற்ற விசாரணைத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார்.