ஏப்ரலில் 9 எரிபொருள் கப்பல்கள் வரும்- கட்டுப்பாடுகள் விரைவில் நீங்கும்
ஏப்ரல் மாதத்தில் ஒன்பது எரிபொருள் கப்பல்கள் சிறிலங்காவுக்கு வரவிருப்பதாக, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் மாதத்தில் ஒன்பது எரிபொருள் கப்பல்கள் சிறிலங்காவுக்கு வரவிருப்பதாக, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் சொத்துகள் மற்றும் கடன்கள் குறித்த அறிக்கைகளை ஏப்ரல் 10ஆம் நாளுக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.
புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதனை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்த வழக்கில், மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர், பல்லேகல தும்பறை சிறைச்சாலையில் பெண் மருத்துவர் ஒருவரை துஷ்பிரயோகம் செய்ய முயன்றதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்தனர்.
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது குறித்து, ஆளும் தேசிய மக்கள் சக்தி இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை என்று, தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் நிஹால் அபேசிங்க தெரிவித்தார்.
கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஓராண்டாக தடுத்து வைக்கப்பட்டிருந்த, கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் இன்று நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டுள்ளார்.
ரஷ்ய எண்ணெய் ஏற்றுமதிக்கு அமெரிக்கா வழங்கியுள்ள விலக்கு ஏப்ரல் 11 ஆம் நாள் காலாவதியாகும் முன்னர், ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களுடன் ஏற்பாடுகளை இறுதி செய்வது கடினமாக இருக்கும் என்று சிறிலங்கா பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருண தெரிவித்துள்ளார்.
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியின் அமைச்சர் பதவி குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் அமைச்சர் பதவியில் தொடர்வார் என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
யக்கலவில் உள்ள முன்னிலை சோசலிசக் கட்சியின் செயலகத்தை ஜேவிபி கைப்பற்றியது சட்டவிரோதம் என்றும், அதனை முன்னிலை சோசலிசக் கட்சியிடம் ஒப்படைக்குமாறும், கம்பஹா நீதிவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நுழைவிசைவு விதிமீறல்களுக்காக கைது செய்யப்பட்ட ஆறு பெண்கள் உள்ளிட்ட 126 சீனர்கள் நேற்று இரவு சிறிலங்காவில் இருந்து சீனாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
கொழும்பு துறைமுக நகரில் முதலீடு செய்வதற்கான சாத்தியங்களை ஆராயுமாறு, ரஷ்ய வெளியுறவு அமைச்சிடம் சிறிலங்கா அரசாங்கம் அழைப்பு விடுக்கவுள்ளது.