மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

ராஜபக்சக்களை அரசியலில் இருந்து அகற்ற முடியாது – மார்தட்டுகிறார் பசில்

ஐதேகவினாலோ, சிறிலங்கா சுதந்திரக் கட்சியினாலோ, ராஜபக்‌சக்களை அரசியலிலிருந்து அகற்ற முடியாது என்று, சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ச தெரிவித்துள்ளார். பிபிசி செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

வரலாற்றில் இடம்பிடித்து விட்டார் பிரபாகரன் – கோபாலகிருஷ்ண காந்தி

பிரபாகரன் வரலாற்றில் இடம்பிடித்து விட்டார், அவரது கொள்கைகள் தற்போதைய நிகழ்ச்சி நிரலில் இருந்து வெளியேறிய போதிலும், மறைந்து விடவில்லை என்று முன்னாள் இந்திய இராஜதந்திரியான கோபாலகிருஷ்ணகாந்தி தெரிவித்துள்ளார்.

தன்னைக் கொல்ல முயன்ற முன்னாள் போராளிக்கு ஆசீர்வாதம் அளித்தார் மைத்திரி

தன்னைக் கொல்ல முயன்ற குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினருக்குப் பொதுமன்னிப்பு அளித்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அவரைச் சந்தித்து ஆசியும் வழங்கினார்.

புலம்பெயர் தமிழர்களை வடக்கில் முதலீடு செய்ய அழைக்கிறார் ரணில்

வடக்கை அபிவிருத்தி செய்வதற்கு, புலம்பெயர் தமிழர்கள் அங்கு முதலீடுகளை செய்வதற்கு முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

சிறிலங்காவின் நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம்- நோர்வே

சிறிலங்காவில் மேற்கொள்ளப்படும் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு நோர்வே முழுமையான ஒத்துழைப்பை வழங்க தயாராக இருக்கிறது என்று நோர்வே வெளிவிவகார அமைச்சர் போர்ஜ் பிரென்டே தெரிவித்தார்.

கோத்தாவிடம் நேற்று 7 மணிநேரம் விசாரணை – இன்றும் தொடரும்

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவிடம், நேற்று ஏழு மணிநேரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட அதேவேளை,  இன்றும் இந்த விசாரணை தொடரவுள்ளது.

அடுத்தவாரம் சீனா செல்கிறார் மகிந்த

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச, வரும் 13ஆம் நாள் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சீன அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே, மகிந்த ராஜபக்ச பீஜிங் செல்லவுள்ளதாகவும், வரும் 16 ஆம் நாள் வரை அவர் அங்கு தங்கியிருப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

படையினரை போர்க்குற்றச்சாட்டில் இருந்து அரசாங்கம் விடுவிக்கும் – சிறிலங்கா அதிபர் உறுதி

போர்க்குற்றச்சாட்டுக்களில் இருந்து சிறிலங்கா படையினரை விடுவிப்பதற்கு, தமது அரசாங்கம் நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்படும் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

சம்பந்தனுடன் நோர்வே வெளிவிவகார அமைச்சர் பேச்சு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள நோர்வே வெளிவிவகார அமைச்சர் போர்ஜ் பிரேன்டே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

பிரகீத் கடத்தலுக்கு உத்தரவிட்டவர் பெயரை சந்தேகநபர்கள் வெளியிட்டனர் – விசாரணையில் திருப்பம்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை கடத்தும் உத்தரவை பிறப்பித்தவரின் பெயரை, விளக்கமறியலில் உள்ள இரண்டு சந்தேக நபர்கள் வெளியிட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.