மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை – முக்கிய அம்சங்கள்

புதிய அரசியலமைப்பு உருவாக்குவ தற்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை நேற்று அரசியலமைப்பு பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த இடைக்கால அறிக்கை பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது.

இடைக்கால அறிக்கை குறித்த நிலைப்பாட்டை விவாதத்தின் போது அறிவிப்போம் – சம்பந்தன்

அரசியலமைப்பு திருத்தத்துக்கான வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு, அரசியலமைப்பு சபையில் விவாதிக்கப்படும் போது வெளிப்படுத்தப்படும் என்றும், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேறியது மாகாணசபை தேர்தல்கள் திருத்தச்சட்டம்

மாகாணசபைத் தேர்தல்கள் திருத்தச்சட்டம் நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

லலித் வீரதுங்க, அனுஷ பல்பிட்டவுக்குப் பிணை

சிறிலங்கா அதிபரின் முன்னாள் செயலர் லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பல்பிட்ட ஆகியோரை பிணையில் செல்ல கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி இன்று அனுமதி அளித்துள்ளார்.

எதிரணி வரிசையில் அருந்திக பெர்னான்டோ

சிறிலங்கா அரசாங்கத்தில்  சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ விவகாரங்களுக்கான பிரதி அமைச்சராக இருந்து அண்மையில் பதவி நீக்கப்பட்ட அருந்திக பெர்னான்டோ, நேற்று நாடாளுமன்றத்தில் எதிரணியில் அமர்ந்து கொண்டார்.

ஜனவரியிலேயே உள்ளூராட்சித் தேர்தல் – மாகாணசபைத் தேர்தல் எப்போது?

உள்ளூராட்சித் தேர்தல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துக்குப் பின்னரே நடத்தப்படும் என்றும், மாகாணசபைத் தேர்தல்கள் தொடர்பாக கட்சித் தலைவர்கள் கூட்டத்தில்  தீர்மானிக்க முடியும் என்றும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

20 ஆவது திருத்தச்சட்ட வரைவுக்கு பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்- சிறிலங்கா உச்சநீதிமன்றம்

சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச்சட்ட வரைவு தொடர்பான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று சிறிலங்காவின் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

காணாமல் ஆக்கப்படுவதில் இருந்து பாதுகாக்கும் அனைத்துலக பிரகடனம் – பின்வாங்கியது அரசு

பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுவதில் இருந்து அனைவரையும் பாதுகாக்கும் அனைத்துலக பிரகடனம் தொடர்பான விவாதம் வரும் 21ஆம் நாள் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படாது என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

போரில் தவறு செய்யாத படையினர் தண்டனைக்கு அஞ்ச வேண்டியதில்லை – சரத் பொன்சேகா

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் ஈடுபட்ட படையினர் எவரும், தாம் குற்றங்கள் எதையும் செய்யாவிடின் எந்தக் கவலையும் கொள்ளத் தேவையில்லை என்று சிறிலங்கா அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நியூயோர்க் சென்றடைந்தார் சிறிலங்கா அதிபர்

ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று அமெரிக்காவைச் சென்றடைந்தார்.