மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகளின் தலையீடுகளைச் சாடும் சீனத் தூதுவர்

சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதற்கான வாய்ப்புகளுக்கான ஒரு கருவியாக பயன்படுத்துவதற்குப் பதிலாக, சிறிலங்காவின் சாதாரண பொதுமக்களுக்கு உதவுவதில் ஏனைய வெளிநாடுகள் கவனம் செலுத்த முடியும் என்று சீனத் தூதுவர் ஷி ஷியான்லியாங் தெரிவித்துள்ளார்.

மகாசங்கங்களின் ஆலோசனைப்படியே ஆட்சி நடத்த வேண்டும் – அமரபுர மகாநாயக்கர்

நாட்டின் ஆட்சியாளர்கள் மகாநாயக்க தேரர்கள் மற்றும் மகா சங்கங்களை ஆலோசனைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்று அமரபுர பீடத்தின் மகாநாயக்கரான கொட்டுகொட தம்மவாச தேரர் தெரிவித்துள்ளார்.

மீண்டும் சந்தித்த மகிந்த – ராஜித

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவைக் கடுமையாக விமர்சித்து வரும் அமைச்சர் ராஜித சேனாரத்ன, மகிந்த ராஜபக்சவுடன் கைகுலுக்கி சிரித்துப் பேசிய நிகழ்வு கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

பெல்ஜியம் வெளிவிவகார அமைச்சருடன் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பேச்சு

பெல்ஜியத்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, அந்த நாட்டின் பிரதிப் பிரதமரும், வெளிவிவகார அமைச்சருமான, டிடியர் ரென்டேர்சுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

ரொஹிங்யா அகதிகளுக்கு எதிராக கல்கிசையில் பௌத்த பிக்குகள் போர்க்கொடி

மியான்மாரின் ரொஹிங்யா அகதிகளை சிறிலங்காவில் தங்க வைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ரொஹிங்யா அகதிகள் தங்கியிருந்த வீட்டை பௌத்த பிக்குகள் அடங்கிய அடிப்படைவாதிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இடைக்கால அறிக்கை குறித்து பங்காளிக் கட்சிகளுடன் ஆலோசனை – மாவை சேனாதிராசா

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நாடாளுமன்ற வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பாக பங்காளிக் கட்சிகள், மற்றும் தமிழ் புலமையாளர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆலோசனை நடத்தவுள்ளது.

சிறிலங்கா காவல்துறையில் சேர தமிழர்கள் தயக்கம் – சிறிலங்கா பிரதமர்

சிறிலங்கா காவல்துறை திணைக்களத்தில் சேர்ந்து கொள்வதில் தமிழர்கள் நாட்டம் காட்டுவதில்லை என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

எல்லைநிர்ணயப் பணிகள் முடிந்த பின்னரே மாகாணசபைகளுக்கு தேர்தல்

எல்லை மீள்நிர்ணயப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த பின்னரே, கிழக்கு, சப்ரகமுவ, வடமத்திய மாகாணசபைகளுக்கான தேர்தல்களை நடத்துவது என்று  சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.

சிறிலங்காவின் முதல் நாடாளுமன்றம் கூடி 70 ஆண்டுகள் நிறைவு – சிறப்பு அமர்வுக்கு ஏற்பாடு

சிறிலங்காவின் முதல் நாடாளுமன்றம் கூட்டப்பட்டு, 70 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, சிறிலங்கா நாடாளுமன்றத்தில் எதிர்வரும் ஒக்ரோபர் 3ஆம் நாள் பிற்பகல் 2.30 மணிக்கு சிறப்பு அமர்வு ஒன்று இடம்பெறவுள்ளது.

சிறிலங்கா அதிபரிடம் விரைவான முன்னேற்றங்களை வலியுறுத்தினார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

சிறிலங்காவில் நிலையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் படிப்படியாக இடம்பெற்று வருவதாகவும், முன்னேற்றங்களை நேரில் கண்டறிவதற்காக சிறிலங்காவுக்கு வருமாறும், ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.