மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

எட்கா உடன்பாட்டை விரைவுபடுத்த புதுடெல்லி செல்கிறார் சிறிலங்கா அமைச்சர்

இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் கையெழுத்திடத் திட்டமிடப்பட்டுள்ள, எட்கா எனப்படும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாட்டை, விரைவுபடுத்துவது தொடர்பாக புதுடெல்லியுடன் பேச்சுக்களை நடத்துவதற்கு, அனைத்துலக வர்த்தக மற்றும் மூலோபாய கொள்கைகள் அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவை சிறிலங்கா அரசாங்கம், இந்தவாரம் இந்தியாவுக்கு அனுப்பவுள்ளது.

சஜின் வாஸ் குணவர்த்தன கைது – ஜூலை 5 வரை விளக்கமறியல்

மகிந்த ராஜபக்சவின் முன்னாள் ஆலோசகரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சஜின் வாஸ் குணவர்த்தன இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறிலங்காவின் சனத்தொகையில் 23.4 வீதமானோர் புகைப்பழக்கம் கொண்டவர்கள்

சிறிலங்காவின் மொத்த சனத்தொகையில் 23.4 வீதமானோர் புகைப்பழக்கமுள்ளவராக இருப்பதாக, சிறிலங்காவின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவ கலாநிதி பாலித மகிபால தெரிவித்துள்ளார்.

750 மில்லியன் ரூபா செலவில் புத்தளத்தில் புதிய உள்நாட்டு விமான நிலையம்

புத்தளம் பாலாவியில், புதிய உள்நாட்டு விமான நிலையம் ஒன்றை அமைக்க சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்த விமான நிலையக் கட்டுமானப் பணிகளுக்கு 750 மில்லியன் ரூபா செலவிடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா அரசுடன் பேச 8 பேர் கொண்ட குழுவை நியமித்தது கூட்டமைப்பு

தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்காக, சிறிலங்கா அரசாங்கத்துடன் விரைவில் பேச்சுக்களை ஆரம்பிக்கவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அதற்கான குழுவொன்றையும் நியமித்துள்ளது.

வீதித்தடுப்பை உடைத்த மகிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் படுகாயம்

மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன மகேந்திரனுக்கு பதவி நீடிப்பு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், மதிப்புக்கூட்டு வரி அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் நடத்தப்பட்ட கூட்டு எதிரணியின் ஆர்ப்பாட்டப் பேரணியின் போது, தடுப்புகளை உடைத்துச் செல்ல முயன்ற இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் காயமடைந்தனர்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தகவல் உரிமைச் சட்டம் ஒருமனதாக நிறைவேறியது

தகவல் உரிமைச் சட்டம் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று ஒருமனதாக- வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது. நேற்றுமுன்தினம் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தகவல் உரிமைச் சட்ட மூலம் மீதான விவாதம் ஆரம்பமானது.

கொத்தணிக் குண்டுகள் குற்றச்சாட்டு – சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு நழுவலான பதில்

இறுதிக்கட்டப் போரில் சிறிலங்கா படையினரால் கொத்தணிக் குண்டுகள் வீசப்பட்டதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி கருத்து வெளியிட மறுத்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் ரஞ்சன் ராமநாயக்க – மகிந்தானந்த கைகலப்பு

சிறிலங்காவின் பிரதி்அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கும் முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேக்கும் இடையில் நாடாளுமன்ற அவைக்கு வெளியே நேற்று கைகலப்பு இடம்பெற்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கப்பலில் வரும் திருவள்ளுவர் சிலைகளை பாடசாலைகள், பல்கலைக்கழகங்களில் நிறுவ ஏற்பாடு

சென்னையில் இருந்து கப்பல் மூலம் கொண்டு வரப்படும் 16 திருவள்ளுவர் சிலைகள், இலங்கையில் உள்ள 13 பாடசாலைகள் மற்றும் 3 பல்கலைக்கழகங்களில் நிறுவப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.