பசில் ராஜபக்சவுடன் தொடர்பா? – நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் மறுப்பு
சிறிலங்கா அரசாங்கம், தன்னுடன் தொடர்புகளை வைத்திருப்பதாக, எதிரணியினர் கூறிய குற்றச்சாட்டை, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி. ருத்திரகுமாரன் மறுத்துள்ளார்.
ருத்திரகுமாரனுக்கும், சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கும் இடையில் மின்னஞ்சல் பரிமாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாக, எதிரணியினர் குற்றம்சாட்டியிருந்தனர்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்திரகுமாரன், சிறிலங்கா அமைச்சர் பசில் ராஜபக்சவுடன் தாம் எந்த தொடர்புகளையும் வைத்திருக்கவில்லை என்றும், அத்தகைய குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்றும் தெரிவித்துள்ளார்.