இந்தியாவுக்குப் புறப்பட்டுச் சென்றார் சஜித்
சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மூன்று நாள்கள் அதிகாரபூர்வ பயணமாக இன்று இந்தியாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
புதுடெல்லியில் அவர், பல அரசாங்க அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளைச் சந்தித்து இருதரப்பு நலன் சார்ந்த விடயங்கள் குறித்துக் கலந்துரையாடவுள்ளார்.
இந்தப் பயணத்தின் போது அவர் தொடர்ச்சியான அதிகாரபூர்வ நிகழ்வுகளிலும் சஜித் பிரேமதாச கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
