மேலும்

வேட்பாளர்களுக்கு பின்னால் சென்று பேசத் தயாரில்லை – 31ஆம் நாளுக்கு முன் முடிவு

சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்குப் பின்னால், சென்று பேச்சு நடத்த நாங்கள் தயாராக இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

“தமிழ் மக்களின் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள 13 அம்சக் கோரிக்கைகள் எமக்கு மிகவும் முக்கியமானதாகும்.

இந்த கோரிக்கைகள் தொடர்பாக, பிரதான கட்சிகளின் அதிபர் வேட்பாளர்கள் அனைவருடனும் பேச நாம் எப்போதும் தயாராகவே இருக்கின்றோம்.

அதிபர் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின், அவர்கள் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்றுகொள்ள வேண்டும்.

இம்முறை தமிழர் பிரதிநிதிகளாகிய எமது நிலைப்பாடு என்ன என்பதை அறிந்து கொள்ள பிரதான கட்சிகள் ஆவலாக உள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அதிபர் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு தினமான  31 ஆம்  நாளுக்கு முன்னர் எமது  நிலைப்பாட்டை அறிவிப்போம்.

அதற்கிடையில் நாம் ஐந்து தமிழ் கட்சிகளும் மீண்டும் இந்த வாரத்தில் சந்தித்து பேச்சுகளை முன்னெடுக்க தயாராக உள்ளோம்“ என்றும்  கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *