நொவம்பர் நடுப்பகுதியில் கொழும்பில் இருந்து வெளியேறுகிறார் வை.கே.சின்ஹா
சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா வரும் நொவம்பர் மாத நடுப்பகுதியில் கொழும்பில் இருந்து வெளியேறவுள்ளார்.
சிறிலங்காவில் மூன்றாண்டு பதவிக்காலத்தின் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா, பிரித்தானியாவுக்கான இந்தியத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை இந்திய வெளிவிவகார அமைச்சு நேற்று வெளியிட்டுள்ளது.
துறைசார் இராஜதந்திரியான வை.கே.சின்ஹா விரையில் தனது புதிய பதவியை ஏற்றுக் கொள்வார்.
இதற்காக அவர், வரும் நொவம்பர் மாத நடுப்பகுதியில் கொழும்பில் இருந்து வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, சிறிலங்காவுக்கான புதிய இந்தியத் தூதுவராக தரன்ஜித் சிங் சந்து ஏற்கனவே இந்திய வெளிவிவகார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.