மேலும்

மாலியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றுவதற்கு சிறிலங்கா படைகளை அனுப்ப முடிவு

slaf-unpkf (2)ஐ.நா அமைதிப்படையில் சிறிலங்கா படையினரின் பங்களிப்பு அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்தார்.

ஆபிரிக்க நாடான மாலிக்கு சிறிலங்கா படையினர் விரைவில் அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

லண்டனில் நடைபெறும் ஐ.நா அமைதிப்படையில் அங்கம் வகிக்கும் நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களின் கூட்டத்தில், இதுதொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

இதன்போது, மாலியில் பணியாற்றவுள்ள சிறிலங்கா படையினருக்கு நவீன கருவிகளைக் கொள்வனவு செய்வதற்கு உதவுமாறு சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கோரியதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கு ஐ.நா அமைதிப்படை அமைச்சரவைக் குழு சாதகமான பதிலை அளித்துள்ளது.

சிறிலங்கா படையினர் தமது திறமைகளை பயன்படுத்திக் கொள்வதற்கு இது பொன்னான வாய்ப்பாக அமையும் என்றும்  ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *