இந்திய வர்த்தக அமைச்சர் சிறிலங்கா வருகிறார்
இந்திய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் விரைவில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வார் என்று, சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷா டி சில்வா தெரிவித்துள்ளார்.
எட்கா எனப்படும், பொருளாதார, தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாட்டில் கையெழுத்திடுவது தொடர்பாக பேச்சுக்களை நடத்தவே அவர் கொழும்பு வரவுள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இவரது பயணம் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், புதுடெல்லியில் அவசர பணிகள் இருந்ததால், கொழும்புக்கான பயணம் தாமதமானது.
கூடிய விரைவில் இந்திய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கொழும்பு வந்து பேச்சுக்களில் ஈடுபடுவார் என்று, பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷா டி சில்வா குறிப்பிட்டார்.