கூட்டுப்படைகளின் தளபதியாகப் பொறுப்பேற்கிறார் எயர் மார்ஷல் கோலித குணதிலக
சிறிலங்காவின் கூட்டுப்படைகளின் தளபதியாக- விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் கோலித குணதிலக நியமிக்கப்படவுள்ளார். அவர் அடுத்தவாரம் தனது புதிய பதவியை பொறுப்பேற்கவுள்ளார்.
கூட்டுப்படைகளின் தளபதியாக பொறுப்பேற்கும் போது, கோலித குணதிலக எயார் சீவ் மார்ஷலாக பதவி உயர்த்தப்படுவார்.
தற்போது கூட்டுப்படைகளின் தளபதியாக உள்ள ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய பிரேசிலுக்கான தூதுவர் பதவிக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.