மேலும்

Archives

இந்தியா – சிறிலங்கா இடையே பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்க வலியுறுத்துகிறது ஐ.நா

இந்தியாவில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் நாடு திரும்புவதற்கு வசதியாக, இருநாடுகளுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையை மீள ஆரம்பிக்குமாறு ஐ.நா முகவர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

விடுதலைப் புலிகளை நினைவு கூர அனுமதிக்க முடியாது – சிறிலங்கா அரசாங்கம்

சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்து ஆறு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், விடுதலைப் புலிகளை நினைவு கூரும் எந்தவொரு முயற்சிக்கும் அனுமதி அளிக்கப்படாது என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நோர்வேயின் முதன்மை 10 வெளிநாட்டவர்களில் ஒருவராக ஈழத்தமிழ்ப் பெண் தெரிவு

நோர்வேயின் 10 முதன்மை வெளிநாட்டவர்களில் (Top 10) ஒருவராக ஈழத்தமிழ் பெண்ணான மகா சிற்றம்பலம் தெரிவாகியுள்ளார். 48 வயதான இவர் 1987ஆம் ஆண்டு, தனது 20வது வயதில் ஈழத்திலிருந்து நோர்வேக்குப் புலம்பெயர்ந்தவர்.

கைது செய்யப்பட்டார் சஜின் வாஸ் குணவர்த்தன

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக, சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

மகிந்த உருவாக்கிய இராணுவப் பாதுகாப்புப் பிரிவு கலைக்கப்பட்டது ஏன்?

வழமையாக, புதிய அதிபர் ஒருவர் பொறுப்பேற்கும் போது முன்னாள் அதிபரின் மெய்ப்பாதுகாவலர்களுக்குப் பதிலாக தனக்கு விசுவாசமானவர்களை நியமிப்பது வழமையாகும். ஆனால் அதிபர் மைத்திரிபால சிறிசேன நடைமுறைக்கு எதிராகச் செயற்பட்டிருந்தார்.

சஜின் வாஸ் குணவர்த்தன கைது? – கோத்தாவிடம் இன்றைய விசாரணை முடிந்தது

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு மிக நெருக்கமானவர்களில் ஒருவரான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன இன்று கைது செய்யப்படவுள்ளதாக சிறிலங்கா காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழர்களை வெற்றி கொள்வது எப்படி?- பலாலியில் படையினருக்கு பாடம் கற்பித்த ருவான்

சிறிலங்காவில் 30 ஆண்டுகளாக நீடித்த போருக்கு, மொழிப் பிரச்சினை முக்கியமானதொரு காரணம் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

அனைத்துலக விசாரணையை வலியுறுத்தி தமிழ்நாட்டில் கையெழுத்து பரப்புரை

ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக அனைத்துலக குற்றவியல் நீதிமன்றால் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும், கையெழுத்துப் பரப்புரை ஒன்றை, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் கடந்த புதன்கிழமை இணையவழி (skype) மூலம் ஆரம்பித்து வைத்துள்ளார்.

சிறிலங்காவில் நோர்வேயின் சமாதான முயற்சிகளை விபரிக்கும் நூல் செப்ரெம்பரில் வெளியாகிறது

சிறிலங்காவில் நோர்வேயின் சமாதான முயற்சிகளை விபரிக்கும் நூல் ஒன்று வரும் செப்ரெம்பர் மாதம் வெளிவரவிருப்பதாகத் தகவல் வெளியிட்டுள்ளார் சிறிலங்காவுக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம்.

பிரித்தானியாவில் இன்று தேர்தல் – உமா குமரனுக்கு அதிக வெற்றி வாய்ப்பு?

பிரித்தானியாவில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், லண்டனில் உள்ள ஹரோ ஈஸ்ட் தொகுதியில் போட்டியிடும், ஈழத்தமிழ் வேட்பாளரான உமா குமரன் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக, செய்திகள் தெரிவிக்கின்றன.