மேலும்

Archives

கூட்டு அரசு தொடரும் – சிறிலங்கா பிரதமர்

தற்போதைய கூட்டு அரசாங்கம் தொடரும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பருத்தித்துறை பிரதேச சபையிலும் ஆட்சியமைத்தது கூட்டமைப்பு

பருத்தித்துறை பிரதேச சபைத் தவிசாளர் பதவிக்கு போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருக்கு, ஈபிடிபி, ஐதேக, சிறிலங்கா பொது ஜன முன்னணி என்பன ஆதரவு அளித்துள்ளன.

மங்களவின் கோரிக்கையை நிராகரித்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்

கிளிநொச்சியில், கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை, சிறிலங்கா நிதியமைச்சர் மங்கள சமரவீர நேற்று சந்தித்து கலந்துரையாடினார்.

வட மாகாண சபையுடன் இணைந்து செயற்பட மங்கள சமரவீர இணக்கம்

முன்னாள் போராளிகளின் மீள்குடியமர்வு, அவர்களுக்கான இலகு கடன்கள், வாழ்வாதார உதவித் திட்டங்களை வடக்கு மாகாண சபையுடன் இணைந்து சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்று சிறிலங்கா நிதி அமைச்சர் மங்கள சமரவீரவிடம், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

வடக்கு முதல்வரை சிறிலங்கா நிதி அமைச்சர், மத்திய வங்கி ஆளுனர் சந்திப்பு

சிறிலங்கா நிதி அமைச்சர் மங்கள சமரவீரவும், மத்திய வங்கி ஆளுனர் இந்திரஜித் குமாரரசுவாமியும் இன்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.

கொழும்பில் சீன வங்கி

சீன வங்கி,( Bank of Chona) சிறிலங்காவில் முதலாவது கிளையை கொழும்பில் திறந்துள்ளது. நேற்று முன்தினம் மாலை நடந்த இந்த திறப்பு விழாவில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

வடக்கு முதல்வருடன் சிறிலங்கா இராணுவத் தளபதி சந்திப்பு

சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க நேற்று, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

வல்வெட்டித்துறை நகர சபை முதல்வர் பதவியும் கூட்டமைப்புக்கு

வல்வெட்டித்துறை நகர சபை முதல்வர் பதவியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. சற்று முன்னர்,  நடந்த, சபையின் முதலாவது அமர்வில், நகர சபையின் புதிய முதல்வராக கோணலிங்கம் கருணானந்தராசா தெரிவு செய்யப்பட்டார்.

பருத்தித்துறை நகர சபை முதல்வர் பதவியும் கூட்டமைப்பு வசம்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அதிக ஆசனங்களைக் கைப்பற்றிய பருத்தித்துறை நகர சபையைின் முதல்வர் பதவியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வசப்படுத்தியுள்ளது.

புலிகளின் ஆயுதக் கப்பல் நீர்கொழும்பு கடலில் மூழ்கடிப்பு

களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கப்பல் ஒன்றை சிறிலங்கா கடற்படையினர் நேற்று நீர்கொழும்புக்கு அப்பால் உள்ள ஆழ்கடலில் மூழ்கடித்தனர்.