மேலும்

Tag Archives: யாழ்ப்பாணம்

விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக நல்லூரில் பேரணி

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய இடங்களில் பேரணி மற்றும் கவனயீர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

காங்கேசன்துறையில் இருந்து உதவிப் பொருட்களுடன் புறப்படுகிறது மனிதாபிமான தொடருந்து

வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிப் பொருட்களை ஏற்றிக் கொண்டு, காங்கேசன்துறையில் இருந்து மாத்தறைக்கு “மனிதாபிமான தொடருந்து” இன்று பயணமாகவுள்ளது.

33 ஆண்டுகளுக்குப் பின்னர் வடக்கில் மீண்டும் ஆரம்பிக்கப்படுகிறது சுங்கப் பணியகம்

33 ஆண்டுகளுக்குப் பின்னர் வடக்கில் சிறிலங்கா சுங்கத் திணைக்களத்தின் செயற்பாடுகள் இந்த மாதம் தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணம் இன்னும் 50 ஆண்டுகளில் அரைப் பாலைவனமாக மாறும் – எச்சரிக்கிறார் சம்பிக்க

அடுத்த 50 ஆண்டுகளில் யாழ்ப்பாணம் அரைப் பாலைவனமாக மாறிவிடும் என்று எச்சரித்துள்ளார் சிறிலங்காவின் பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க.

வடக்கின் அபிவிருத்தி குறித்து சிறிலங்கா பிரதமர் ஆய்வு

வடக்கின் அபிவிருத்தி தொடர்பாக ஆராய்வதற்காக நேற்று யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பருத்தித்துறை துறைமுகத்தை பார்வையிட்டார்.

முழு அடைப்புப் போராட்டத்தினால் முடங்கியது வடக்கு, கிழக்கு பகுதிகள்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கு நீதி வழங்கக் கோரி, வடக்கு கிழக்கு பகுதிகளில் இன்று நடத்தப்படும் முழு அடைப்புப் போராட்டத்தினால், தமிழர் தாயகப் பகுதிகள் எங்கும் முற்றாகச் செயலிழந்துள்ளன.

வடக்கு, கிழக்கில் உலகத் தரம்வாய்ந்த மூன்று வீதிகளை அமைக்க இந்தியா இணக்கம்

சிறிலங்காவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் உலகத் தரம்வாய்ந்த வீதி உட்கட்டமைப்பு அபிவிருத்தியை மேற்கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கத்துடன் ஒத்துழைக்க இந்திய அரசாங்கம் இணங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதிபர் தேர்தலுக்கு முன்னர் கூட்டமைப்புக்கு எழுத்து மூலம் வாக்குறுதி வழங்கினார் மைத்திரி

சிறிலங்கா அதிபர் தேர்தலில் பொதுவேட்பாளராக போட்டியிட்ட போது, சிறிலங்கா படையினர் வசம் இருக்கும் தனியார் காணிகளை விடுவிப்பதாக மைத்திரிபால சிறிசேன தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எழுத்து மூலம் உறுதி வழங்கியிருந்தார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணமும் செல்கிறார் இந்தியப் பிரதமர் மோடி

அடுத்தமாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி யாழ்ப்பாணத்துக்கும் செல்வதற்கு வாய்ப்புகள் இருப்பதாக, இந்திய அதிகாரிகளை மேற்கோள்காட்டி பிரிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழர் தாயகத்தில் அன்னை பூபதி நினைவு கூரல் நிகழ்வுகள்

விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியப்படைகள் நடத்தி வந்த போரை நிறுத்தி,  நிபந்தனையின்றிப் பேச்சு நடத்தி பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்தி உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் 29 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வுகள் நேற்று தமிழர் தாயகப் பகுதிகளில் இடம்பெற்றன.