மேலும்

Tag Archives: போர்க்குற்றங்கள்

விசாரணையில் வெளிநாட்டு நிபுணர்கள் பங்கேற்பது அரசியலமைப்பு மீறல் – என்கிறார் மகிந்த

சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான  விசாரணைகளில், வெளிநாட்டு நிபுணர்களை ஈடுபடுத்துவது சிறிலங்காவின் அரசியலமைப்பை மீறும் செயல் என்று தெரிவித்துள்ளார், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச.

போர்க்குற்ற விசாரணைகளில் அனைத்துலக நீதிபதிகள் இடம்பெற வேண்டும் – பரணகம ஆணைக்குழு

சிறிலங்காவில் போரின் போது, போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளன என்பதை உறுதிப்படுத்தியுள்ள  மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான அதிபர் ஆணைக்குழு, எந்தவொரு போர்க்குற்ற விசாரணையும் அனைத்துலக நீதிபதிகளின் பங்களிப்புடன் இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

போர்க்குற்ற விசாரணையை உள்ளகப் பொறிமுறையே நடத்துமாம் – சிறிலங்கா அதிபர் கூறுகிறார்

போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்துவது உள்நாட்டு பொறிமுறையாகவே இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

பரணகம ஆணைக்குழுவை கலைக்க வேண்டும் – ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பரிந்துரை

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவினால் அமைக்கப்பட்ட, மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான – காணாமற்போனோர் குறித்து விசாரிப்பதற்கான அதிபர் ஆணைக்குழு மீது நம்பிக்கையில்லை என்றும்  அதனைக் கலைக்க வேண்டும் என்றும் சிறிலங்கா அரசாங்கத்திடம் கோரியுள்ளார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன்.

கலப்பு நீதிமன்றத்துக்கு பரிந்துரைக்குமாறு அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜோன் கெரிக்கு கடிதம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா முன்வைக்கவுள்ள தீர்மான வரைவில், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் பரிந்துரைத்துள்ளபடி, போர்க்குற்றங்கள், மீறல்கள் குறித்து விசாரிக்க கலப்பு நீதிமன்றத்தை அமைக்கும் விடயம் உள்ளடக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தீர்மான வரைவு குறித்து ஜெனிவாவில் இன்றும் நாளையும் கூட்டங்களை நடத்துகிறது அமெரிக்கா

சிறிலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் என்ற தலைப்பில், அமெரிக்கா தயாரித்துள்ள தீர்மான வரைவு தொடர்பாக, இன்றும் நாளையும் ஜெனிவாவில் முறைசாராக் கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன.

கலப்பு நீதிமன்ற விவகாரம் – நாடாளுமன்றில் அவசர விவாதம் நடத்தக் கோருகிறார் விமல் வீரவன்ச

போர்க்குற்றங்கள் குறித்து கலப்பு விசாரணை நடத்தக் கோரும், ஐ.நா விசாரணை அறிக்கை தொடர்பாக நாடாளுமன்றத்தில் அவசர விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று, சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம், மனுவொன்றைக் கையளித்துள்ளார் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச.

அமெரிக்க தீர்மான வரைவு வெளியானது – கலப்பு விசாரணைக்கு அழைப்பு விடுக்கிறது

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய அமர்வில் சிறிலங்கா தொடர்பாக அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தின் முதல் வரைவு ஆவணம் வெளியாகியுள்ளது.

ஐ.நா அறிக்கை குறித்து மூச்சு விடாதாம் இந்தியா – தீர்மான வரைவின் மீதே குறி

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பாக, இந்தியா கருத்து எதையும் வெளியிடாது என்று கூறப்படுகிறது.

ஐ.நா விசாரணை அறிக்கையின் சுருக்கம் – முழுமையாக

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா நடத்திய விசாரணை அறிக்கை இரண்டு பகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் அறிக்கையின் சுருக்கம், ஆங்கிலத்தில் 19 பக்கங்களில் இடம்பெற்றுள்ளது. இரண்டாவது பகுதி 261 பக்கங்களில் உள்ளது.