சிறிலங்கா புலனாய்வு தலைவரை ஐ.நா குழு விசாரிக்க வேண்டும் – ஊடக அமைப்புகள் கோரிக்கை
ஜெனிவாவில் நடைபெறும் சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் 59 ஆவது கூட்டத்தொடரில், சிறிலங்காவின் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் சிசிர மென்டிஸ், சிறிலங்காவில் சார்பில் பங்கேற்பது குறித்து ஆர்எஸ்எவ் எனப்படும் எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பும், ஜேடிஎஸ் எனப்படும் சிறிலங்காவின் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் அமைப்பும் அதிர்ச்சியை வெளியிட்டுள்ளன.