மேலும்

Tag Archives: சீனா

சிறிலங்காவின் வளர்ச்சிக்குத் தடையாகும் சீனா – ‘போப்ஸ்’

தனது நாட்டை மீண்டும் பேண்தகு வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்வதற்கு சிறிலங்கா தயாராகியுள்ளது. அடுத்துவரும் பத்தாண்டில் வளர்ந்து வரும் சந்தைகளில் தமக்கான வாய்ப்பைப் பெற்றுக்கொள்வதற்காகத் தம்மை நன்றாகத் தயார்ப்படுத்தும் சில நாடுகளின் பட்டியலில் சிறிலங்காவும் உள்ளடங்குவதாக அண்மையில் மக்கின்சி பூகோள நிறுவகத்தால் – McKinsey Global Institute – மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறிலங்காவுடனான நடைமுறை ஒத்துழைப்பு துரித வளர்ச்சி – சீனத் தூதுவர் பெருமிதம்

சிறிலங்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான நடைமுறை ஒத்துழைப்பு கடந்த ஆண்டில் துரிதமாக வளர்ச்சியடைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார், சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் ஷியுவான்.

அதிருப்தி வெளியிட்ட சீனா – பிரச்சினைகளை தீர்ப்பதாக உறுதியளித்த சிறிலங்கா அதிபர்

சீனாவின் முதலீட்டில் மேற்கொள்ளப்படும் சில திட்டங்களில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன், சீனத் தூதுவர் இன்று பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

கடன் பொறி குற்றச்சாட்டில் இருந்து விடுவித்த சிறிலங்கா பிரதமருக்கு சீனா வரவேற்பு

சீனாவின் கடன் பொறிக்குள் சிறிலங்கா சிக்கிக் கொள்ளவில்லை என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ள கருத்தை, சீனா வரவேற்றுள்ளது.

இந்தியாவின் கையில் 40 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டம் – ஏமாந்தது சீனா

இழுபறியில் இருந்து வந்த-  வடக்கு, கிழக்கில் 40 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டத்தை இந்தியாவிடம் ஒப்படைக்க சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவின் கடன் சுமைக்கு சீனா காரணமல்ல – வெளிவிவகார பேச்சாளர்

சீனாவின் கடன்கள், சிறிலங்காவுக்குப் பிரதான கடன்சுமையை ஏற்படுத்தவில்லை என்று சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹூவாசுன்யிங் தெரிவித்துள்ளார்.

நீர்க்காகம் – IX கூட்டுப் பயிற்சிக்கு தயாராகும் சிறிலங்கா படைகள்

சிறிலங்கா இராணுவத்தின் ஏற்பாட்டில் ‘நீர்க்காகம் – IX ‘ கூட்டுப் பயிற்சி (Cormorant Strike IX) எதிர்வரும் செப்ரெம்பர் 6ஆம் நாள் தொடங்கவுள்ளது.

வடக்கு வீடமைப்புத் திட்டத்தை குழப்புகிறதா இந்தியா? – சிறிலங்காவிடம் கேள்வி எழுப்பியது சீனா

சீனாவினால் வடக்கில் முன்னெடுக்கப்படவிருந்த 40 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டதன் பின்னணியில், இந்தியாவின் தலையீடு இருந்ததா என்று, சிறிலங்கா அரசாங்கத்திடம் சீனா கேள்வி எழுப்பியுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வடக்கு, கிழக்கிற்கு உதவ சீனா விருப்பம்

சிறிலங்காவின் வடக்கு- கிழக்கில் மீள்கட்டுமானப் பணிகளுக்கு உதவ விருப்பம் கொண்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கின் மீது கண் வைக்கும் சீனா

சிறிலங்காவில் முன்னர் போர் நடந்த பிரதேசங்களில் புதிய உட்கட்டமைப்பு திட்டங்களின் மீது சீனா கண் வைத்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், தெரிவித்துள்ளது.