மேலும்

Tag Archives: சீனா

அம்பாந்தோட்டையில் விரைவில் சீனாவின் இராணுவத் தளம் – அமெரிக்க துணை அதிபர் எச்சரிக்கை

கடன் இராஜதந்திரத்தை  தனது பூகோள செல்வாக்கை விரிவுபடுத்திக் கொள்வதற்கு சீனா பயன்படுத்திக் கொள்கிறது என்றும், அம்பாந்தோட்டை துறைமுகம், பீஜிங்கின் வளர்ந்து வரும் நீல நீர் கடற்படையின் முன்னரங்க தளமாக  விரைவில் மாற்றமடையும் என்றும் அமெரிக்காவின் துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியப் பெருங்கடல் விவகாரம் – கொழும்பில் கூடும் இந்திய, அமெரிக்க சீன உயர் அதிகாரிகள்

கொழும்பில் அடுத்தவாரம் நடைபெறவுள்ள இந்தியப் பெருங்கடல் தொடர்பான கருத்தரங்கில், இந்தியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

சிறிலங்காவை சீனா கடன்பொறியில் தள்ளவில்லை – கருணாசேன கொடிதுவக்கு

நிதியை வழங்கி சீன அரசாங்கம்,  சிறிலங்கா அரசாங்கத்தை கடன் பொறிக்குள் கொண்டு செல்லவில்லை என்று சீனாவுக்கான சிறிலங்கா தூதுவர் கருணாசேன கொடிதுவக்கு தெரிவித்துள்ளார். சீனாவின் CGTN ஊடகத்துக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

சிறிலங்காவின் வளர்ச்சிக்குத் தடையாகும் சீனா – ‘போப்ஸ்’

தனது நாட்டை மீண்டும் பேண்தகு வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்வதற்கு சிறிலங்கா தயாராகியுள்ளது. அடுத்துவரும் பத்தாண்டில் வளர்ந்து வரும் சந்தைகளில் தமக்கான வாய்ப்பைப் பெற்றுக்கொள்வதற்காகத் தம்மை நன்றாகத் தயார்ப்படுத்தும் சில நாடுகளின் பட்டியலில் சிறிலங்காவும் உள்ளடங்குவதாக அண்மையில் மக்கின்சி பூகோள நிறுவகத்தால் – McKinsey Global Institute – மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறிலங்காவுடனான நடைமுறை ஒத்துழைப்பு துரித வளர்ச்சி – சீனத் தூதுவர் பெருமிதம்

சிறிலங்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான நடைமுறை ஒத்துழைப்பு கடந்த ஆண்டில் துரிதமாக வளர்ச்சியடைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார், சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் ஷியுவான்.

அதிருப்தி வெளியிட்ட சீனா – பிரச்சினைகளை தீர்ப்பதாக உறுதியளித்த சிறிலங்கா அதிபர்

சீனாவின் முதலீட்டில் மேற்கொள்ளப்படும் சில திட்டங்களில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன், சீனத் தூதுவர் இன்று பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

கடன் பொறி குற்றச்சாட்டில் இருந்து விடுவித்த சிறிலங்கா பிரதமருக்கு சீனா வரவேற்பு

சீனாவின் கடன் பொறிக்குள் சிறிலங்கா சிக்கிக் கொள்ளவில்லை என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ள கருத்தை, சீனா வரவேற்றுள்ளது.

இந்தியாவின் கையில் 40 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டம் – ஏமாந்தது சீனா

இழுபறியில் இருந்து வந்த-  வடக்கு, கிழக்கில் 40 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டத்தை இந்தியாவிடம் ஒப்படைக்க சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவின் கடன் சுமைக்கு சீனா காரணமல்ல – வெளிவிவகார பேச்சாளர்

சீனாவின் கடன்கள், சிறிலங்காவுக்குப் பிரதான கடன்சுமையை ஏற்படுத்தவில்லை என்று சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹூவாசுன்யிங் தெரிவித்துள்ளார்.

நீர்க்காகம் – IX கூட்டுப் பயிற்சிக்கு தயாராகும் சிறிலங்கா படைகள்

சிறிலங்கா இராணுவத்தின் ஏற்பாட்டில் ‘நீர்க்காகம் – IX ‘ கூட்டுப் பயிற்சி (Cormorant Strike IX) எதிர்வரும் செப்ரெம்பர் 6ஆம் நாள் தொடங்கவுள்ளது.