அவசரப்பட்டு முடிவெடுக்கமாட்டோம் – என்கிறது ஜேவிபி
சிறிலங்காவில் வரும் ஜனவரி 8ம் நாள் அதிபர் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமது நிலைப்பாடு என்னவென்று இதுவரை முடிவெடுக்கவில்லை என ஜேவிபி தெரிவித்துள்ளது.
சிறிலங்காவில் வரும் ஜனவரி 8ம் நாள் அதிபர் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமது நிலைப்பாடு என்னவென்று இதுவரை முடிவெடுக்கவில்லை என ஜேவிபி தெரிவித்துள்ளது.
சிறிலங்காவில் அதிபர் தேர்தல் வரும் ஜனவரி மாதம் 8ம் நாள் நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய இன்று மாலையில் அறிவித்துள்ளார்.
எதிரணியின் பொது வேட்பாளராகப் போட்டியிடவுள்ள மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட மூன்று அமைச்சர்களை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச உடனடியாகப் பதவியில் இருந்து நீக்கியுள்ளார்.
சிறிலங்கா அதிபர் தேர்தலில் எதிரணியின் பொதுவேட்பாளராகப் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படும், மைத்திரிபால சிறிசேன கொழும்பில் சற்றுநேரத்தில் செய்தியாளர்களைச் சந்திக்கவுள்ளார்.
சிறிலங்கா உள்ளிட்ட 18 நாடுகளில் சீனா கடற்படைத் தளங்களை அமைக்கவுள்ளதாக நமீபிய நாளிதழில் வெளியான செய்தி, சிறிலங்கா நாடாளுமன்றத்திலும் நேற்று எதிரொலித்தது.
அடுத்த அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என்று சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவினால் நேற்று நள்ளிரவு வெளியிடப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய பாதுகாப்பு அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகளைக் கொண்ட குழுக்கள் அடுத்தடுத்த வாரங்களில் சிறிலங்காவுக்கான பயணங்களை மேற்கொள்ளவுள்ளன.
மாத்தளை மாவட்ட மருத்துவமனைக்குப் பின்புறம் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள், 1950ம் ஆண்டுகளின் துவக்கத்தில் புதைக்கப்பட்டவை என்று கண்டறியப்பட்டுள்ளது.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இன்று அடுத்த அதிபர் தேர்தலுக்கான முறைப்படியான அறிவிப்பை வெளியிடுவார் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.