மேலும்

Tag Archives: இந்தியா

13வது திருத்தத்துக்கு அப்பால் செல்லும்படி சிறிலங்காவிடம் வலியுறுத்தினார் மோடி- சுஸ்மா தகவல்

விரைவாகவும், முழுமையாகவும், 13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலமும், அதற்கு அப்பால் செல்வதன் மூலமும், சிறிலங்காவில் சிறப்பான எதிர்காலத்தை ஏற்படுத்த முடியும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சிறிலங்கா தலைவர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

சீனாவுக்கு உரிமையாகப் போகும் சிறிலங்கா வான்பரப்பு – சிக்காகோ பிரகடனத்தால் சிக்கல்

கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த திட்டத்தை தொடர அனுமதிக்கப்பட்டால், சிறிலங்கா தனது வான் பிராந்தியத்தின் ஒரு பகுதியை சீனாவிடம் இழக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருமலையை இந்தியாவுக்கு வழங்கியதால் பயங்கர விளைவுகள் ஏற்படும் – எச்சரிக்கிறார் திஸ்ஸ விதாரண

திருகோணமலையை இந்தியாவுக்கு வழங்கியமை எதிர்காலத்தில் பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்த வழிவகுக்கும் என்று முன்னாள் அமைச்சரும் லங்கா சமசமாசக் கட்சித் தலைவருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண எச்சரித்துள்ளார்.

சிறிலங்கா ஆட்சி மாற்றத்தின் பின் சீனா எதிர்கொள்ளும் சவால்கள் – கேணல் ஹரிகரன்

உலகின் உண்மையான அரசியலின் பிரகாரம், தனது மூலோபாய வெளிக்குள் சீனா உள்நுழைவதானது இந்திய மாக்கடல் பிராந்தியத்திலும் சிறிலங்காவிலும் இந்தியா தனது மேலாதிக்கத்தை இழப்பதற்கு வழிவகுக்கும் என இந்தியா கருதுகிறது.

புதுடெல்லியில் உடன்பாட்டில் கையெழுத்திடுவதை வேண்டுமென்றே தவிர்த்தேன் – சிறிலங்கா அதிபர்

தனது புதுடெல்லிப் பயணத்தின் போது, இந்தியாவுடன் விரிவான பொருளாதார கூட்டு உடன்பாட்டைச் செய்து கொள்ளும் விவகாரம் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டிருந்த போதும், தாம் அதனை வேண்டுமேன்றே தவிர்த்ததாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மகிந்த அரசின் ஊழல்களை விசாரிக்க அமெரிக்கா, இந்தியா, பிரித்தானியாவிடம் உதவி

முன்னைய அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் இடம்பெற்ற நிதி மோசடிகள் தொடர்பான விசாரணைகளுக்கு, இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகளின் உதவி கோரப்பட்டுள்ளதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்திய வரவு செலவுத் திட்டத்தில் சிறிலங்காவுக்கு 500 கோடி ரூபா ஒதுக்கீடு

இந்தியாவின் 2015/16ம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில், சிறிலங்காவுக்கான உதவித் திட்டங்களுக்கு 500 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் வணிகச் செயற்பாடுகளில் இந்தியா தலையிடக் கூடாது – சம்பிக்க ரணவக்க

சீனாவின் கொழும்புத் துறைமுக நகரத் திட்டம், இராணுவப் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படாமல், முற்றிலும்  வணிக நோக்கம் கொண்டதாக இருந்தால், அதுகுறித்த இந்தியா கவலைப்படத் தேவையில்லை என்று சிறிலங்கா அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா – இந்திய உறவு நெருக்கம் சீனாவுக்கு மகிழ்ச்சியாம்

இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள நெருக்கம் சீனாவுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக, சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மைத்திரிக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

மீள்குடியேற்றம், நிலங்கள் விடுவிப்பு உள்ளிட்ட பல விடயங்களில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது.