புலிகளிடம் மீட்ட ஆயுதங்கள் வெளிநாட்டு தீவிரவாத அமைப்புகளுக்கு விற்பனை?
விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள், மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் ஆபிரிக்காவில் உள்ள தீவிரவாத அமைப்புகளுக்கு விற்பனை செய்யப்பட்டதா என்பது தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக சிறிலங்கா அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.