அவைத் தலைவர் விவகாரத்தில் புதிய சர்ச்சை வெடிக்கும் ஆபத்து
வடக்கு மாகாண அரசியலில் கடந்த ஒருவாரமாக ஏற்பட்டிருந்த குழப்ப நிலை முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்ற நிலையில், வடக்கு மாகாண அவைத் தலைவர் தொடர்பாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்டிருக்கும் கருத்து, புதிய சர்ச்சைகளை ஏற்படுத்தக் கூடும் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.