மேலும்

Tag Archives: அம்பாந்தோட்டை

பூகோள கடல்சார் மையமாக அம்பாந்தோட்டையை மாற்றுவதே தமது இலக்கு என்கிறது சீன நிறுவனம்

பூகோள கடல்சார் மையமாக அம்பாந்தோட்டைத் துறைமுகத்தைக் கட்டியெழுப்புவதே, தமது நோக்கம் என்று சீனாவின் மேர்ச்சன்ட் போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம்  தெரிவித்துள்ளது.

அம்பாந்தோட்டைக்கு வந்த சீன குழுவினருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் – கடற்படை பலத்த பாதுகாப்பு

அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், சீன குழுவொன்று நேற்று அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்துள்ளது.

அம்பாந்தோட்டையில் இயற்கை எரிவாயு மின் திட்டம்- சீனாவுடன் பேசுகிறது சிறிலங்கா

அம்பாந்தோட்டையில், இயற்கை எரிவாயு மின் திட்டம் ஒன்றை ஆரம்பிப்பது தொடர்பாக, சீனாவுடன் பேச்சுக்களை நடத்தி வருவதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஜப்பானின் நாசகாரி போர்க்கப்பல்

ஜப்பானிய கடற்படையின் ‘அமகிரி’ என்ற  நாசகாரி போர்க்கப்பல் நேற்று சிறிலங்காவின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. மூன்று நாட்கள் நல்லெண்ணப் பயணமாக வந்துள்ள இந்தக் கப்பலை சிறிலங்கா கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர். 

நாளை பதவி விலகுகிறார் சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச

சிறிலங்காவின் நீதி மற்றும் பௌத்த சாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ச நாளை தனது பதவி விலகல் அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மத்தல விமான நிலையம் 40 ஆண்டுகள் இந்தியா வசமாகிறது

மத்தல அனைத்துலக விமான நிலையத்தை இந்திய நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்குவதற்கு சிறிலங்கா அமைச்சரவையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

வெளிநாட்டு தூதரகம் குழப்பியதா? – விசாரணை நடத்த சிறிலங்கா பிரதமர் உத்தரவு

அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாடு குறித்து சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நடக்கவிருந்த விவாதம் குழப்பப்பட்டதன் பின்னணியில் வெளிநாட்டு தூதரகம் இருந்ததா என்பது குறித்து விசாரணை நடத்துமாறு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

அம்பாந்தோட்டை உடன்பாடு மீதான விவாதத்தை குழப்பிய இராஜதந்திர தூதரகம் – சிறிலங்கா அரசு

அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாடு தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடக்கவிருந்த விவாதம் குழப்பப்பட்டதன் பின்னணியில், சக்திவாய்ந்த நாடு ஒன்றின் தூதரகமே இருந்தது என்று சிறிலங்கா அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

2020 வரை அரசாங்கத்தை மாற்ற இடமளியேன்- சிறிலங்கா அதிபர்

2020ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்த அரசாங்கத்தை மாற்றுவதற்கு எவரையும் அனுமதிக்கப் போவதில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மகிந்த ஆட்சிக்கு வந்ததும் அம்பாந்தோட்டை உடன்பாட்டை கிழித்தெறிவோம் – பசில் ராஜபக்ச

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வந்ததும், அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கிய உடன்பாடு கிழித்தெறியப்படும் என்று சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.