ட்ரம்ப் நிர்வாகத்துடன் முதல் அதிகாரபூர்வ பேச்சுக்களை தொடங்கியது சிறிலங்கா
அமெரிக்காவில் புதிதாக பதவியேற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப் அரசாங்கத்துடன், சிறிலங்கா அரசாங்கம் நேற்று முதல்முறையாக அதிகாரபூர்வ பேச்சுக்களை ஆரம்பித்துள்ளது.
அமெரிக்காவில் புதிதாக பதவியேற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப் அரசாங்கத்துடன், சிறிலங்கா அரசாங்கம் நேற்று முதல்முறையாக அதிகாரபூர்வ பேச்சுக்களை ஆரம்பித்துள்ளது.
பொறுப்புக்கூறலுக்கான நீதிப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள் உள்ளடக்கப்படமாட்டார்கள் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான மற்றொரு தீர்மானத்தை முன்வைக்கும் முயற்சிகளைப் பிற்போடச் செய்வதற்காக, அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சு நடத்த அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த வொசிங்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.
இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடரில் சிறிலங்கா அரசாங்கம் சிறப்பு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது அமர்வில், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பங்கேற்று, சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து உரையாற்றவுள்ளார்.
சிறிலங்காவில் தொடர்ந்தும் சித்திரவதை கலாசாரம் நீடிப்பதாக, ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் ஜூவான் மென்டஸ் சமர்ப்பித்துள்ள அறிக்கையை நிராகரித்து, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா அரசாங்கம் பதில் அறிக்கையை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளது.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நாளை சுவீடனுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சுவீடன் வெளிவிவகார அமைச்சர் மார்கொட் வோல்ஸ்ரோமின் அழைப்பின் பேரிலேயே அவர் இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் ஜனநாயகத்தை மீள நிலையப்படுத்தியதன் மூலமே, சிறிலங்காவுக்கு மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை கிடைத்துள்ளதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பாடசாலைச் சீருடையில் இருந்த மாணவன் ஒருவனை, தாக்க முயற்சித்தார் என்று சிறிலங்கா இராணுவத்தில் இருந்து அண்மையில் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
சிறிலங்காவில் நிலைமாறுகால நீதி மற்றும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் திட்டங்களுக்கு 1.7 மில்லியன் டொலரை வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளது.