மேலும்

Tag Archives: செல்வம் அடைக்கலநாதன்

முன்னாள் போராளிகள் கைதுகளின் பின்னணி என்ன? – சிறிலங்கா அரசிடம் கூட்டமைப்பு கேள்வி

புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகள் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதற்கான காரணங்கள் குறித்து சிறிலங்கா அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டும் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது.

பாலித தேவாரப்பெருமவும், பிரசன்ன ரணவீரவுமே மோதல்களுக்கு காரணம்- விசாரணைக்குழு அறிக்கை

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற மோதல்களுக்குக் காரணமான, ஐதேக உறுப்பினர் பாலித தேவாரப்பெரும மற்றும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் பிரசன்ன ரணவீர ஆகியோருக்கு எதிராக, கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க, விசாரணைக் குழு பரிந்துரைத்துள்ளது.

செல்வம் அடைக்கலநாதனுக்கு மாரடைப்பு – சிறி ஜெயவர்த்தனபுர மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

தமிழ் தேசியக் கூட்டமைப்பின்  நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், இன்று அதிகாலையில் மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, சிறிஜெயவர்த்தனபுர மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தக் கோருகிறது கூட்டமைப்பு

13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

வரவுசெலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிப்போம் – ரெலோ அறிவிப்பு

தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படாவிடின், 2016ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோ அறிவித்துள்ளது.

ஐ.நா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டும் – கூட்டமைப்பு

ஜெனிவா தீர்மானத்தை சிறிலங்கா அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதற்கு, அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று, ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேரில் வலியுறுத்தியுள்ளது.

அடுத்த கட்டம் குறித்து ஆராய நாளை கூட்டமைப்பின் முக்கிய கூட்டம்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள் நாளை கூடி ஆராயவுள்ளனர்.

நாளை மறுநாள் வடக்கு, கிழக்கில் பொது வேலைநிறுத்தப் போராட்டம் – கூட்டமைப்பு ஏற்பாடு

சிறைச்சாலைகளில் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், வடக்கு கிழக்கில், நாளை மறுநாள் பொது வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

62 அரசியல் கைதிகளை இரண்டு கட்டங்களை விடுவிக்க உயர்மட்டக் கூட்டத்தில் முடிவு

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, தமிழ் அரசியல் கைதிகளில் 62 பேரை இரண்டு கட்டங்களாக பிணையில் விடுவிப்பதற்கு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று நடந்த உயர்மட்டக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

60 அரசியல் கைதிகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் விடுதலை?

நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ள, சுமார் 60 அரசியல் கைதிகள், அடுத்த மாதம் முற்பகுதியில் விடுவிக்கப்படுவார் என்று என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.