விமான பயணிகள் காவிச் செல்லும் கைப்பை தொடர்பாக புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு
கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாகப் பயணம் செய்யும் விமானப் பயணிகள், கைப்பையில் காவிச் செல்லக் கூடிய பொருட்கள் தொடர்பாக புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாகப் பயணம் செய்யும் விமானப் பயணிகள், கைப்பையில் காவிச் செல்லக் கூடிய பொருட்கள் தொடர்பாக புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சீனாவின் பீஜிங் நகரில் நடைபெறவுள்ள ஒரு பாதை ஒரு அணை உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தேயிலைப் பொதிகளை அன்பளிப்பாக வழங்கும் திட்டம் ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க அனைத்துலக விமான நிலையத்தின் விரிவாக்கப்பட்ட ஓடுபாதை இன்று திறந்து வைக்கப்படவுள்ளது. இதையடுத்து, கடந்த மூன்று மாதங்களாக சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்த விமான நிலையம் வழமைக்குத் திரும்பவுள்ளது.
மூன்று நாட்கள் பயணமாக சிறிலங்கா வந்துள்ள சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் சாங் வான்குவான் இன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்த பின்னர், தொடர்ச்சியாக அதிகரித்து வந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை கடந்த பெப்ரவரி மாதத்தில் திடீர் சரிவைச் சந்தித்துள்ளது.
சிறிலங்கா அரசியல்வாதி ஒருவரால் காதலர் தினத்தை முன்னிட்டு இறக்குமதி செய்யப்பட்ட 53 கிலோ ரோஜா மலர்கள் மற்றும் 2000 ஏனைய மலர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.
கட்டுநாயக்க விமான நிலைய ஓடுபாதை புனரமைப்பு நடவடிக்கைகள் நேற்று ஆரம்பமாகியுள்ள நிலையில், பகுதி நேரமாக விமான நிலையம் மூடப்படுவதால், கடும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்துக்கு பயணிகளுடன் வரும் விருந்தினர்கள், புறப்படுகை பிரதேசத்துக்குள் வரும் ஜனவரி 6ஆம் நாள் தொடக்கம் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று சிறிலங்காவின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமால்சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் பிரதான அனைத்துலக விமான நிலையமான, பண்டாரநாயக்க அனைத்துலக விமான நிலையத்தின் அனைத்துச் செயற்பாடுகளும், எதிர்வரும் ஜனவரி 6ஆம் நாள் தொடக்கம், காலை 8 மணி தொடக்கம் பிற்பகல் 4.30 மணி வரை மூடப்படவுள்ளது.