மேலும்

காணாமல் போனோரின் கதியை சிறிலங்கா வெளிப்படுத்த வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்

சிறிலங்கா பல்வேறு பரப்புகளில் இன்னமும் மறுசீரமைப்புகளை செய்ய வேண்டியுள்ளது என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் உண்மை கண்டறியும் குழு சிறிலங்கா பிரதமரிடம் தெரிவித்துள்ளது.

வித்தியா கொலை வழக்கில் செப்ரெம்பர் 27ஆம் நாள் தீர்ப்பு

புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் படுகொலை வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 27ஆம் நாள் வழங்கப்படும் என்று யாழ். மேல் நீதிமன்றத்தின் சிறப்பு தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.

காணாமல் போனோர் பணியகத்தை செயற்படுத்தும் அறிவிப்பை வெளியிட்டார் சிறிலங்கா அதிபர்

காணாமல் போனோர் பணியகத்தை செயற்படுத்துவதற்கான சிறப்பு வர்த்தமானி அறிவிப்பை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன  நேற்றிரவு வெளியிட்டுள்ளார்.

அடுத்தமாதம் சிறிலங்கா வருகிறார் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்

உண்மையை ஊக்குவித்தல், நீதி, இழப்பீடு, மற்றும் மீளநிகழாமையை உறுதிப்படுத்துவதற்கான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர், பப்லோ டி கிரெய்ப் அடுத்தமாதம் சிறிலங்காவுக்கு மீண்டும் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

ஜனவரி 20க்குப் பின்னரே உள்ளூராட்சித் தேர்தல் – மகிந்த தேசப்பிரிய

உள்ளூராட்சித் தேர்தல் 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20 ஆம் நாளுக்குப் பின்னரே நடத்தப்படக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாக சிறிலங்காவின் தேர்தல்கள்ஆணைக்குழு  தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரி்வித்தார்.

நீர்க்காகம் கூட்டுப் பயிற்சியை நேரில் பார்வையிடுகிறார் சிறிலங்கா அதிபர்

கடற்படை, விமானப்படையுடன் இணைந்து சிறிலங்கா இராணுவம் நடத்தும், ‘நீர்க்காகம் பயிற்சி- VIII – 2017’ கூட்டுப் போர்ப் பயிற்சியை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை நேரில் பார்வையிடவுள்ளார்.

வெலிக்கடைச் சிறைச்சாலை மருத்துவமனையில் நேற்று திடீர் தேடுதல்

வெலிக்கடைச் சிறைச்சாலை மருத்துவமனையில் நேற்றுப் பிற்பகல் 1 மணி தொடக்கம்  3 மணி வரை திடீர் தேடுதல் நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அணுகுண்டு சோதனை நடத்திய வடகொரியாவுக்கு சிறிலங்கா கண்டனம்

ஆறாவது அணுகுண்டுப் பரிசோதனையை கடந்த  செப்ரெம்பர் 3ஆம் நாள் நடத்தியுள்ள வடகொரியாவுக்கு, சிறிலங்கா கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது. 

பிரதி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் அருந்திக பெர்னான்டோ

சுற்றுலா ஊக்குவிப்பு மற்றும் கிறிஸ்தவ விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் அருந்திக பெர்னான்டோவை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பதவிநீக்கம் செய்துள்ளார்.

20 ஆவது திருத்தச்சட்ட வரைவுக்கு சப்ரகமுவ மாகாணசபையும் ஆதரவு

சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச்சட்ட வரைவுக்கு, சப்ரகமுவ மாகாணசபையும் அங்கீகாரம் வழங்கியுள்ளது.