மேலும்

வரும் புதன்கிழமை கலைக்கப்படுகிறது சிறிலங்கா நாடாளுமன்றம்?

சிறிலங்கா நாடாளுமன்றம் வரும் புதன்கிழமை (மே 20ம் நாள்) கலைக்கப்படலாம் என்று அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுவதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

புலம்பெயர் தமிழர்களுடன் சாதகமான சந்திப்பு – எரிக் சொல்ஹெய்ம் தகவல்

புலம்பெயர் தமிழர்களுடன் தாம் பேச்சுக்களை நடத்தியிருப்பதாகவும், இந்தப் பேச்சுக்கள் சாதகமான வகையில் அமைந்திருப்பதாகவும், சிறிலங்காவுக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

ஐந்து நாள் பயணமாக இன்று சிறிலங்கா வருகிறார் பாகிஸ்தான் இராணுவத் தளபதி

பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் ரஹீல் ஷரீப் சிறிலங்காவுக்கு இன்று அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். இன்று பிற்பகல் சிறிலங்கா வரும் பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஐந்து நாட்கள் இங்கு தங்கியிருப்பார்.

நோர்வேயின் முதன்மை 10 வெளிநாட்டவர்களில் ஒருவராக ஈழத்தமிழ்ப் பெண் தெரிவு

நோர்வேயின் 10 முதன்மை வெளிநாட்டவர்களில் (Top 10) ஒருவராக ஈழத்தமிழ் பெண்ணான மகா சிற்றம்பலம் தெரிவாகியுள்ளார். 48 வயதான இவர் 1987ஆம் ஆண்டு, தனது 20வது வயதில் ஈழத்திலிருந்து நோர்வேக்குப் புலம்பெயர்ந்தவர்.

சதுப்புநிலக் காடுகளைப் பாதுகாக்கும் உலகின் முதல் நாடாகிறது சிறிலங்கா

சதுப்புநிலக் காடுகளை முழுமையாகப் பாதுகாக்கும் உலகின் முதல் நாடாக சிறிலங்கா மாறவுள்ளது. இதற்கான திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் பிரதி அமைச்சர் திடீர் மரணம்

சிறிலங்காவின் சட்டம் ஒழுங்கு,மற்றும் கிறிஸ்தவ விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் நிரஞ்சன் விக்கிரமசிங்க சற்று முன்னர் திடீர் சுகவீனம் காரணமாக பாணந்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமானார்.

மீண்டும் நேபாளத்தைத் தாக்கியது பாரிய நிலநடுக்கம் – சிறிலங்கா தூதரகமும் சேதம்

நேபாளத்தை இன்று நண்பகல் மீண்டும் தாக்கிய பாரிய நிலநடுக்கத்தினால் காத்மண்டுவில் உள்ள சிறிலங்கா தூதரகமும் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் சிறிலங்காவுடன் புதிய உடன்பாடுகளில் கையெழுத்திடுகிறது ரஷ்யா

பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில், சிறிலங்காவும் ரஷ்யாவும் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்திக் கொள்ளும், புதிய உடன்பாடுகள் மற்றும் புரிந்துணர்வு உடன்பாடுகளில் கையெழுத்திடவுள்ளன.

ஜெயலலிதா விடுதலையை வரவேற்கும் இலங்கைத் தமிழ் அரசியல் பிரமுகர்கள்

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டுள்ளது குறித்து, இலங்கைத் தமிழர் அரசியல் பிரமுகர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளதுடன், விரைவில் அவர் முதல்வர் பதவியை பொறுப்பேற்பார் என்றும் எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் இருந்து 65 அகதிகள் நாளை நாடு திரும்புகின்றனர்

போரின் போது நாட்டை விட்டுத் தப்பிச் சென்று தமிழ்நாட்டில் அடைக்கலம் தேடியிருந்த 65 இலங்கைத் தமிழர்கள் நாளை சிறிலங்காவுக்குத் திருப்பி அழைத்து வரப்படவுள்ளதாக, சிறிலங்காவின் மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.