மேலும்

சந்திரிகா,மைத்திரி, ரணில் நேற்றிரவு சந்திப்பு – பிரச்சினைகளை தீர்க்க முயற்சி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க ஆகியோருக்கு இடையில் நேற்றிரவு முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரகீத் தடுத்து வைக்கப்பட்ட கிரிதல இராணுவ முகாமில் சித்திரவதைக் கூடங்கள்

கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட, தடுத்து வைக்கப்பட்டிருந்த கிரிதல இராணுவ முகாமில் சித்திரவதைக் கூடங்கள் இயங்கி வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

போர்க்குற்றச்சாட்டுகள் வலுப்பெறுகிறது – ஒப்புக்கொள்கிறார் சிறிலங்கா இராணுவத் தளபதி

சிறிலங்கா இராணுவத்தின் மீதான போர்க்குற்றச்சாட்டுகள் அனைத்துலக மட்டத்தில் வலுப்பெற்று வருவதாக ஒப்புக்கொண்டுள்ள சிறிலங்கா இராணுவத் தளபதி, அந்தக் குற்றச்சாட்டுகளை வலுவிழக்கச் செய்வதற்கு சிறிலங்கா இராணுவத்தின் பாதுகாப்புக் கருத்தங்குகள் உதவியாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஐ.நா விசாரணை அறிக்கை – கூட்டமைப்புக்கு அமெரிக்கா கொடுத்துள்ள உறுதிமொழி

போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த, அமெரிக்கா முன்னின்று செயற்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உறுதிமொழி வழங்கியுள்ளார் அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால்.

ராஜபக்சவின் தோல்வி சீனாவுக்கு சிறந்த பாடம்- கேணல் ஹரிகரன்

சீனர்கள் நிதியை விரும்புகிறார்கள். சீன அதிபர் பட்டுப்பாதைத் திட்டத்தை நிறைவேற்ற விரும்புகிறார். இவ்விரண்டையும் அடைவதற்கு சீனாவிற்கு சிறிலங்கா மிகவும் முக்கியமானதாகும்.

கூட்டமைப்புடன் ஒன்றரை மணிநேரம் பேச்சு நடத்தினார் நிஷா பிஸ்வால்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை அமெரிக்காவின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் இன்று காலை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

காலை வாரியது அமெரிக்கா – ஜெனிவாவில் சிறிலங்காவைக் காப்பாற்றப் போவதாக அறிவிப்பு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த அமர்வில், போர்க்குற்றங்கள் குறித்த அறிக்கை முன்வைக்கப்பட்டாலும், சிறிலங்காவுக்குப் போதிய காலஅவகாசம் வழங்க கோரும், சிறிலங்காவுக்கு ஆதரவான தீர்மானம் ஒன்றை அமெரிக்கா முன்வைக்கவுள்ளது.

செப்.2ஆம் நாளே புதிய அமைச்சரவை பதவியேற்பு – அமைச்சர் பதவிகள் குறித்து இணக்கம்

சிறிலங்காவின் புதிய தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்பு மீண்டும் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் செப்ரெம்பர் 2ஆம் நாளே புதிய அமைச்சரவை பதவியேற்பு இடம்பெறும் என்று ஐதேகவின் தவிசாளர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.

புதிய அமைச்சரவையில் 45 அமைச்சர்கள் – நாளை பதவியேற்பு நடக்குமா?

சிறிலங்காவின் புதிய அமைச்சரவை 45 அமைச்சர்களைக் கொண்டதாக இருக்கும் என்று, ஐதேகவின் பிரதித் தலைவர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றங்கள், மனித உரிமைகள், பொறுப்புக்கூறலை மறந்தது அமெரிக்கா

சிறிலங்காவின் புதிய அரசாங்கத்துடன் அமெரிக்கா அதிகளவு மென்போக்கை கடைப்பிடிப்பதாகவும், அதன் காரணமாகவே போர்க்குற்றங்கள், பொறுப்புக்கூறல் குறித்து, அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகள் வாய்திறக்கவில்லை என்றும் கொழும்பு அரசியல் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.