மேலும்

பிரிவு: சிறப்பு செய்திகள்

திருமலை புத்தர் சிலை – கடலோர பாதுகாப்பு மற்றும் கடலோர வள முகாமைத்துவத் திணைக்களம் விளக்கம்

திருகோணமலையில் உள்ள சிறிசம்புத்த ஜெயந்தி போதிராஜா விகாரைஅருகே, ஏற்பட்ட பதற்ற நிலை குறித்து கடலோர பாதுகாப்பு மற்றும் கடலோர வள முகாமைத்துவத் திணைக்களம் அதிகாரப்பூர்வ விளக்கத்தை வெளியிட்டுள்ளது.

கடற்படை முகாமை அகற்ற வேண்டாமென காரைநகர் மக்கள் கோருகிறார்கள்

காரைநகர் கடற்படை  முகாமை அகற்ற வேண்டாம் என்று,  அப்பகுதியில் வாழும் 147 தமிழ் மக்கள் கைச்சாத்திட்டு கடிதம் ஒன்றை கையளித்துள்ளதாக  சிறிலங்கா பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

புத்தர் சிலை வைக்கப்பட்ட இடத்தில் முன்னர் வழிபாட்டு இடம் இருக்கவில்லை

திருகோணமலை புத்தர் சிலை வைக்கப்பட்ட இடத்தில் விகாரையோ வழிபாட்டு இடமோ முன்னர் இருந்திருக்கவில்லை என சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

வடக்கில் இராணுவம் வசமுள்ள காணிகளை விடுவிக்கக் கூடாது

வடக்கு மாகாணத்தில் இராணுவ கட்டுப்பாட்டிலுள்ள தேசியப் பாதுகாப்புடன் தொடர்புடைய காணிகளை ஒருபோதும் விடுவிக்கக் கூடாது என, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்  நளின் பண்டார வலியுறுத்தியுள்ளார்.

பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா பதவி விலக வேண்டும்

பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா உடனடியாக பதவி விலக வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

திருமலையில் அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் நிறுவப்பட்டது

திருகோணமலை கடற்கரையை அண்டிய பகுதியில் நேற்று முன்தினம் இரவு சிறிலங்கா காவல்துறையினரால் அகற்றப்பட்ட  புத்தர்சிலை நேற்று பிற்பகல் 1.35 மணியளவில் மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் விகாரை அமைக்க முயன்ற பிக்குகள் விரட்டியடிப்பு

திருகோணமலை- கடற்கரையில் பௌத்த பிக்குகளால் அனுமதியின்றி விகாரை  அமைக்கும் பணி நேற்றிரவு காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. 

சிறிதரனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை ஆரம்பம்

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வடக்கின் 4 மருத்துவமனைகளை அபகரிக்க மத்திய அரசு திட்டம்

வடக்கு மாகாணத்தில் உள்ள 4 மருத்துவமனைகளை மத்திய அரசின் சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வரவுள்ளதாக சிறிலங்கா சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா – சிறிலங்கா இடையே பாதுகாப்பு உடன்பாடு கைச்சாத்து

அமெரிக்காவும் சிறிலங்காவும், பாதுகாப்புத் தொடர்பான, புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றில்  கையெழுத்திட்டுள்ளன.