வல்லமை தாராயோ…!
நட்டாற்றில் விடப்பட்டது போல், இரண்டாவது தடவை நாம் உணர்ந்து, இன்றோடு ஒரு மாதம். கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்கு முன்னர், முள்ளிவாய்க்கால் பேரழிவு முதல்முறையாக எம்முள் அந்த உணர்வை ஏற்படுத்தியது.
நட்டாற்றில் விடப்பட்டது போல், இரண்டாவது தடவை நாம் உணர்ந்து, இன்றோடு ஒரு மாதம். கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்கு முன்னர், முள்ளிவாய்க்கால் பேரழிவு முதல்முறையாக எம்முள் அந்த உணர்வை ஏற்படுத்தியது.
இத்தேர்தல் தமிழ் தேசிய கூட்டமைப்பினதோ அல்லது அதன் உறுப்பினர்களுடையதோ அரசியற்பலத்தினையும் அவர்களது பதவிக்கதிரைகளையும் தீர்மானிப்பதல்ல. எனவே எவ்வித அவசரமும் அற்ற நிதானம் செயற்பாடுகளை தீர்மானிப்பதிலும் அறிக்கைகள் நேர்காணல்களை தருவதிலும் கருத்துரைப்பதிலும் தேவைப்படுகிறது.
கடந்த ஓகஸ்ட் 18ம் நாள் ‘புதினப்பலகை’ செய்தித்தளம் முடங்கிப்போனது. எங்கள் தொழில்நுட்ப அறிவும் சொற்பமானது என்பதால் என்ன நடந்தது என்பதை ஊகிக்கவே முடியவில்லை. பதட்டமாகவே இருந்தது. அரைமணி, கால்மணி நேர இடைவெளியில் புதினப்பலகையை திறப்பதற்காக முயற்சித்து முயற்சித்து களைத்துப்போனோம்.
இலங்கைத்தீவின் வடக்கில் தமிழ்மக்கள் எந்தவிதமான பாரிய எதிர்பார்ப்புக்களையும் கொண்டிராமல் மிகப்பெரும் புரட்சியினை ஏற்படுத்தியுள்ளார்கள்.
தைப்பொங்கல் – தமிழர் திருநாள் – புலம்பெயர் தமிழர் திருநாள் தைப்பொங்கல் : தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர் நம்பிக்கை. பழையன கழித்தலும் புதியன புகுத்தலும் அந்த நாளில் தமிழரது வாழ்வியல் நடைமுறை.
‘புதினப்பலகை’ தனது தனித்துவத்தை பேணியபடி நான்காம் ஆண்டில் காலடி பதித்திருக்கின்றது. அப்படியானால் முள்ளிவாய்க்கால் பேரவலமும் நிகழ்ந்து நான்காம் ஆண்டாகின்றது.
தமிழ்கூறு நல்லுலகெங்கும் புயல் வீசி சுழன்றடித்துக் கொண்டிருந்த வேளையில்தான் ‘புதினப்பலகை’ எனும் இச்சிறு தோணி 17-11-2009ல் தனது பயணத்தை தொடங்கியது.
திருவிழாவில் காணாமல் போன வாய்பேசாக் குழந்தையாகத் தவித்து நிற்கின்றது ஈழத் தமிழினம். அதிலும் – தேர்தல் திருவிழாவின் நெரிசலுக்குள் சிக்குண்டு விழி பிதுங்கி நிற்கின்றது ஈழத் தமிழ் தேசியம்.
உலகின் எல்லா தேசிய இனங்களின் மீதும் வரலாறு ஆழமான வடுக்களைப் பதித்துவிட்டுத் தான் செல்கின்றது. ஈழத் தமிழ் சமூகத்தின் மீது மே 19, 2009 அன்று வரலாறு இழைத்ததை, வெறுமனே ஒரு வடு அல்லது ஒரு காயம் என்று மட்டும் சொல்லிவிட்டு, தாண்டிச் சென்றுவிட முடியாது. அது ஒரு தண்டனை; அது ஒரு பாடம்.