மேலும்

பிரிவு: செய்திகள்

கோத்தாவுக்காக பொய்ச்சாட்சியம் அளித்த மேஜர் ஜெனரலுக்கு நீதிமன்றம் அழைப்பாணை

அதிபர் ஆணைக்குழுவின் முன்பாக பொய்ச்சாட்சியம் அளித்த ரக்ன லங்கா பாதுகாப்பு சேவையின் பொது முகாமையாளரும், சிறிலங்கா இராணுவ முன்னாள் அதிகாரியுமான மேஜர் ஜெனரல் காமினி ஜெயசுந்தரவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பெப்ரவரியில் அமெரிக்க- சிறிலங்கா கூட்டுக் கலந்துரையாடல் – அமெரிக்க அதிகாரி அறிவிப்பு

இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முதலாவது அமெரிக்க – சிறிலங்கா கூட்டுக் கலந்துரையாடல் வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ளது.

பரணகம ஆணைக்குழுவின் விசாரணைகள் நிறுத்தப்பட வேண்டும் – சுமந்திரன்

காணாமற்போனோர் குறித்து விசாரணைகளை நடத்தும் பரணகம ஆணைக்குழுவின் விசாரணைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பாதுகாப்புச் செயலருடன் இந்தியத் தூதுவர் முக்கிய பேச்சு

சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா இன்று சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சியைச் சந்தித்து முக்கிய பேச்சுக்களை நடத்தியுள்ளார். சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் இன்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

கொழும்பு வந்தார் தோமஸ் சானொன் – மங்களவுடன் பேச்சுக்கள் ஆரம்பம்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அடிநிலைச் செயலர் பதவிக்கு முன்மொழியப்பட்டுள்ள, தூதுவர் தோமஸ் சானொன் தற்போது சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன் பேச்சுக்களை நடத்தி வருகிறார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் விரைவில் சிறிலங்காவுக்குப் பயணம்

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் விரைவில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்திய நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அமைதி மரத்தை பரிசளித்து மைத்திரியின் பொறுப்பை நினைவுபடுத்தினார் பாப்பரசர்

கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவரான பாப்பரசர் முதலாவது பிரான்சிசை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, இன்று வத்திக்கானில் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

மகிந்தவின் சொத்துக்களை கண்டுபிடிக்க இந்தியா சென்றது சிறிலங்கா அதிகாரிகள் குழு

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள பணம் மற்றும் சொத்துக்களை மீட்பதற்கு, சிறிலங்கா அதிகாரிகளுக்கு இந்தியா உதவிகளை வழங்கியுள்ளது.

சரத் பொன்சேகாவின் நுழைவிசைவு விண்ணப்பத்தை அமெரிக்கா நிராகரிப்பு

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயக கட்சியின் தலைவருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் நுழைவிசைவு விண்ணப்பத்தை அமெரிக்கா இடைநிறுத்தி வைத்துள்ளது.

மனித உரிமை விவகாரங்களில் சிறிலங்கா அரசுக்கு முழு ஆர்வமில்லை – ஐ.நா நிபுணர் கருத்து

போர்க் காலத்தில் இடம்பெற்ற பல்வேறு மனித உரிமை விவகாரங்களை கையாளுவது ஊக்கமளிக்கும் சமிக்கையாகத் தென்படுகின்ற போதிலும், சிறிலங்காவின் புதிய அரசாங்கம் இதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் ஆர்வம் காண்பிக்கவில்லை என்று ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர்  கிறிஸ்ரோப் ஹெய்ன்ஸ்  தெரிவித்துள்ளார்.