மேலும்

பிரிவு: செய்திகள்

சிறைக்குள் யோசிதவிடம் கைத்தொலைபேசி – விசாரணைக்கு அமைச்சர் உத்தரவு

வெலிக்கடைச் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோசித ராஜபக்ச, சிறைக்கூண்டில் கைத்தொலைபேசி பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக விசாரணைகளை நடத்துமாறு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியமர்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.

சம்பந்தன், ரணில், மைத்திரியை இன்று சந்திக்கிறார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

சிறிலங்காவுக்கான நான்கு நாள் பயணத்தை இன்று மாலை நிறைவு செய்து கொள்ளவுள்ள, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன், இன்று காலையில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அதிபர் மைத்திரிபால சிறிசேன ஆகியோரைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

எல்லாக் கேள்விகளுக்கும் இன்று பதிலளிப்பேன் – ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

எல்லாக் கேள்விகளுக்கும் இன்று தான் பதிலளிப்பதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று மல்வத்தை, அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

புதிய கட்சி அமைக்கிறது மகிந்த அணி – நேற்றிரவு நடந்த கூட்டத்தில் முடிவு

மகிந்த ராஜபக்ச ஆதரவு அணியினர் புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்க நேற்றிரவு நடத்தப்பட்ட கூட்டம் ஒன்றில் முடிவு செய்துள்ளனர். சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த- மகிந்த ஆதரவு, அதிருப்தி நாடாளுமன்ற உறுப்பினர்களே இந்த முடிவை எடுத்துள்ளனர்.

சரத் பொன்சேகாவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்க ஐதேக செயற்குழுக் கூட்டத்தில் முடிவு

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயக கட்சியின் தலைவருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஐக்கிய தேசிய முன்னணியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளார்.

அனைத்துலகப் பொறிமுறை தேவையில்லை – ஐ.நா மனித உரிமை ஆணையாளரிடம் மகாநாயக்கர்

உள்ளக பொறிமுறைகளின் மூலம், நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும், அனைத்துலகப் பொறிமுறைகள் தேவையில்லை என்றும், ஐ.நா மனித உரிமை ஆணையாளரிடம், மல்வத்தை பீட மகாநாயக்கர் திப்பட்டுவாவே சித்தார்த்த சிறி சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா இராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லையாம் – கோத்தா கூறுகிறார்

போரின் போது, சிறிலங்கா இராணுவம் போர்க்குற்றங்கள் எதிலும் ஈடுபடவில்லை என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பாதுகாப்பு அதிகாரிகள், முப்படைத் தளபதிகளை சந்தித்தார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் இன்று சிறிலங்கா பாதுகாப்பு உயர் அதிகாரிகளை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

பலாலி விமான நிலையத்தை விரிவாக்க இந்தியா உதவி – விமானப்படைக் குழுவை அனுப்புகிறது

பலாலி விமானப்படைத் தளத்தை  சிவில் விமான நிலையமாக விரிவாக்குவதற்கும், காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கும் உதவிவழங்க  இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது.

போர்க்குற்ற விசாரணை தொடர்பான ஐ.நாவின் நிலைப்பாடு நாளை வெளியாகும்?

சிறிலங்கா அரசாங்கம் விரைவில் ஆரம்பிக்கவுள்ள போர்க்குற்ற விசாரணை தொடர்பான ஐ.நாவின் நிலைப்பாட்டை, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் கொழும்பில் நாளை நடத்தவுள்ள ஊடக மாநாட்டில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.