சிறைக்குள் யோசிதவிடம் கைத்தொலைபேசி – விசாரணைக்கு அமைச்சர் உத்தரவு
வெலிக்கடைச் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோசித ராஜபக்ச, சிறைக்கூண்டில் கைத்தொலைபேசி பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக விசாரணைகளை நடத்துமாறு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியமர்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.