சிறிலங்காவுக்கு 210 மில்லியன் யூரோ நிதியுதவி வழங்குகிறது ஐரோப்பிய ஒன்றியம்
சிறிலங்காவின் அபிவிருத்திக்கு 210 மில்லியன் யூரோ நிதியுதவி வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றியம் உறுதி அளித்துள்ளது.
சிறிலங்காவின் அபிவிருத்திக்கு 210 மில்லியன் யூரோ நிதியுதவி வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றியம் உறுதி அளித்துள்ளது.
தாம் எதிர்பார்த்தது போன்று கோத்தாவின் போர் நூல் பிரபலமடையவில்லை என்று ஏமாற்றம் வெளியிட்டுள்ளார் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச. ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தடுப்புக்காவலில் இருந்த விடுதலைப் புலிகள் இயக்க சந்தேகநபரைச் சுட்டுக்கொன்ற சிறிலங்கா இராணுவ அதிகாரி, கொல்லப்பட்டவரின் உறவினர்களுக்கு நீதிமன்ற உத்தரவுப்படி, 20 இலட்ச ரூபா இழப்பீடு செலுத்தினார்.
சிறிலங்கா அதிபர், பிரதமர், சபாநாயகர் ஆகியோர் வெளிநாடு சென்றிருந்த நிலையில், பிரதம நீதியரசர் சிறீபவனே சிறிலங்கா அரச நிர்வாகத்துக்குப் பொறுப்பாக இருந்ததாக வெளியான தகவலை சபாநாயகர் மறுத்துள்ளார்.
போகம்பரை மைதானத்தில் நடந்த சிறிலங்கா பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில், 17 வயதுப் பிரிவு கோல் ஊன்றிப் பாய்தல் போட்டியில் யாழ். மாவட்ட மாணவர்கள் ஒட்டுமொத்தப் பதக்கங்களையும் அள்ளிக் கொண்டனர்.
வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் புனர்வாழ்வு நடவடிக்கைகள் தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன விளக்கிக் கூறியுள்ளார்.
சிறிலங்காவுக்கு சுமார் 2623 கோடி ரூபா (120 மில்லியன் யுவான்) பெறுமதியான இராணுவ உதவிகளை வழங்கவும், ஆழ்கடல் ரோந்துக் கப்பல் ஒன்றை வழங்கவும் சீனா இணக்கம் தெரிவித்துள்ளது.
சிறிலங்காவில் யுத்தம் முடிவடைந்த பின்னர், பெண்களின் சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற துறைகளில் பாரியளவில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் அதிகரித்துள்ளன என்பதால் இதனைத் தடுப்பதற்கு சிறிலங்காவைச் சேர்ந்த செயற்பாட்டார்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறிலங்காவுக்கு எல்லா விதத்திலும் ஆதரவு வழங்கத் தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் உறுதியளித்துள்ளார்.
சிறிலங்காவின் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் டில்ருக்சி டயஸ் விக்கிரமசிங்க தமது பதவியில் இருந்து விலகுவதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிவித்துள்ளார். அவர் தமது பதவி விலகல் கடிதத்தை, சிறிலங்கா அதிபருக்கு இன்று அனுப்பி வைத்துள்ளார்.