மேலும்

பிரிவு: செய்திகள்

சிறிலங்கா பிரதமரைச் சந்தித்தார் ஐ.நாவின் அரசியல் விவகாரச் செயலர்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான செயலர் ஜெப்ரி பெல்ட்மன் இன்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

சிறிலங்கா படையினரைப் போலவே ஏனைய நாட்டுப் படையினரும் ஆய்வு– ஐ.நா

ஐ.நா அமைதிப்படைக்கு படையினரைச் சேர்த்துக் கொள்ளும் போது, சிறிலங்கா படையினருக்கு கையாளப்படும் வழிமுறைகள் ஏனைய நாடுகளின் படையினரை சேர்க்கும் போதும் கையாளப்படும் என்றும், அவர்கள் தமது நாடுகளில் எந்த சட்டவிரோத செயற்பாடுகளிலும் ஈடுபடவில்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் ஐ.நா தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரின் முதல் வெளிவிவகார அமைச்சர் பிறந்த வீட்டைப் பார்வையிட்டார் விவியன்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன், சிங்கப்பூரின் முதலாவது வெளிவிவகார அமைச்சராகவும், பிரதிப் பிரதமராகவும் இருந்த சின்னத்தம்பி இராஜரட்ணம் பிறந்த வீட்டுக்குச் சென்றிருந்தார்.

யாழ்ப்பாணத்தில் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் – பல்வேறு நிகழ்வுகள், சந்திப்புகளில் பங்கேற்றார்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன், நேற்று யாழ்ப்பாணத்தில் மேற்கொண்டு, பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றார்.

கேப்பாப்புலவு: 5 மில்லியன் ரூபாவை வாங்கி விட்டு காலை வாரியது சிறிலங்கா இராணுவம்

முல்லைத்தீவு- கேப்பாப்புலவில், பொதுமக்களின் 189 ஏக்கர் காணிகளை விடுவிப்பதாக கூறி சிறிலங்கா இராணுவம் ஏமாற்றியுள்ளது. சிறிலங்கா இராணுவத்தினரால் உறுதியளிக்கப்பட்டது போல, நேற்று காணிகள் விடுவிக்கப்படவில்லை என்று முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

ஐ.நாவுடன் சிறிலங்கா அரசாங்கம் முரண்படாது – ராஜித சேனாரத்ன

மனித உரிமைகள் விவகாரத்தில் ஐ.நாவுடன் சிறிலங்கா அரசாங்கம் முரண்படாது என்று சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். கொழும்பில் நேற்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

சிறிலங்கா- அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிசப் நேற்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான செயலர் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன் பேச்சு

சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான செயலர் ஜெப்ரி பெல்ட்மன் இன்று காலை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

உதவி ஆய்வாளர் சிறீகஜன் வெளிநாடு செல்ல தடை – கைது செய்வதற்கு சிஐடி தீவிர முயற்சி

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமார் என்பவரை தப்பிக்க உதவினார் என்று குற்றம்சாட்டப்படும், சிறிலங்கா காவல்துறையின் உதவி ஆய்வாளர் சிறீகஜன் நாட்டை விட்டு வெளியேற நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சிறிலங்காவின் நிறைவேற்றப்படாத வாக்குறுதி

போர் என்பது பல்வேறு அழிவுகளைக் கொண்டது.  உயிரிழப்பு மட்டுமல்லாது, காயங்கள் மற்றும் உடைமை அழிவுகள் போன்ற பல்வேறு அழிவுகளைக் கொண்ட ஒன்றாகும். ஆனால் இந்த யுத்தமானது தொடர்ந்தும் அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறது.