மேலும்

பிரிவு: செய்திகள்

சுதந்திரக் கட்சித் தலைவர்களுடன் மைத்திரி இன்று முக்கிய கலந்துரையாடல்

சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்கள் இன்று பிற்பகல் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் முக்கிய பேச்சுக்களை நடத்தவுள்ளனர்.

சுதந்திரக் கட்சியில் போட்டியிட மகிந்த விண்ணப்பிக்கவில்லை – ராஜித சேனாரத்ன

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு இடமளிக்குமாறு சிறிலங்கா சுதந்திரக் கட்சியிடம், மகிந்த ராஜபக்ச இன்னமும் அதிகாரபூர்வமாக விண்ணப்பிக்கவில்லை என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ரணில் – சந்திரிகா இன்று முக்கிய சந்திப்பு

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவுக்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.

வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலவீனப்படுத்த கட்சிகள், குழுக்கள் தீவிர முயற்சி

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலத்தை சிதைக்கும் நோக்கில், அதிகளவு கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் களமிறங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகிந்தவை நிறுத்துவதற்கு சுதந்திரக் கட்சி முடிவெடுக்கவில்லை- சந்திரிகா

தாம் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக மகிந்த ராஜபக்ச அறிவித்திருந்தாலும், அவருக்கு போட்டியிட வாய்ப்பளிப்பது குறித்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி இன்னமும் முடிவெடுக்கவில்லை என்று முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

மகிந்தவைத் தோற்கடிப்பதற்காக கூட்டணி அமைக்கத் தயார் – சரத் பொன்சேகா

மகிந்த ராஜபக்சவும் அவரது உதவியாளர்களும் மீண்டும் அதிகாரத்துக்கு வரக் கூடிய அச்சுறுத்தல் எழுந்தால், அவரைத் தோற்கடிப்பதற்காக கூட்டணி அமைக்கத் தயார் என்று ஜனநாயக கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அறிவித்துள்ளார்.

முக்கிய தலைவர்கள் மெதமுலானவுக்கு வரவில்லை – மகிந்தவுக்கு ஏமாற்றம்

மெதமுலானவில் இன்று நடத்திய கூட்டத்தில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்காதமை, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மிருசுவில் படுகொலைகள் – நடந்தது என்ன?

‘பதினைந்து ஆண்டுகள் என்பது மிகவும் நீண்ட காலம். நீதி கிடைப்பதற்கு நீண்ட காலம் எடுத்துள்ளது. இருப்பினும் இறுதியில் நீதியைப் பெற்றுத் தந்தமைக்காக நாங்கள் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறோம்’ என மிருசுவிலில் இடம்பெற்ற படுகொலையில் கொல்லப்பட்ட கதிரன் ஞானச்சந்திரனின் மனைவியும் ஞானச்சந்திரன் சாந்தனின் தாயுமான ஞானச்சந்திரன் பரமேஸ்வரி தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன் – அறிவித்தார் மகிந்த

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுமாறு விடுத்த கோரிக்கையைத் தட்டிக்கழிக்காமல் தான் ஏற்றுக் கொள்வதாக சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மகிந்த வீட்டுக்குப் படையெடுத்துள்ள 60 வாகனங்கள் – முடிவை சற்று நேரத்தில் அறிவிக்கிறார்

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராகப் போட்டியிட வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கும் வாகனப் பேரணி ஒன்று இடம்பெற்றது.