சிறிலங்காவுக்கு சாதகமான மற்றொரு ஜெனிவா தீர்மானம்?
எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் தனக்குச் சாதகமான மற்றொரு தீர்மானத்தை மேற்கொள்வதற்கான ஆதரவை சிறிலங்கா அரசாங்கம் திரட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் தனக்குச் சாதகமான மற்றொரு தீர்மானத்தை மேற்கொள்வதற்கான ஆதரவை சிறிலங்கா அரசாங்கம் திரட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்புப் படையினர் பிரதிவாதிகளாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களாகவும் காணப்படும் அரசியல் சார்ந்த வழக்குகளில் ஜூரி சபையின் விசாரணை பொருத்தமற்றது என சட்டவாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இங்கிலாந்திலிருந்து வெளிவரும் பத்திரிகை புலம்பெயர் தமிழ் மக்களது போராட்டத்தை Black Berry revelolution என்ற பெயரில் அழைத்திருந்தது. ஏனெனில் அந்த காலங்களில் Black Berry என்ற கைதொலைபேசி மிகவும் பிரபல்யமாக இருந்தது. – லண்டனில் இருந்து புதினப்பலகைக்காக லோகன் பரமசாமி.
பல்வேறு விவகாரங்களிலும், அதிருப்திகள் காணப்பட்டாலும், இந்தியாவுடனான சிறிலங்காவின் உறவானது 2016 ஆண்டில் மேலும் முன்னேற்றமடைந்துள்ளது என்று பிரிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இம்மாதத்தின் ஆரம்பத்தில், அமெரிக்க கடற்படை அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று சிறிலங்கா கடற்படை மற்றும் விமானப்படை வீரர்களுடன் ஒரு வாரகால கூட்டுப்பயிற்சிகளை மேற்கொண்ட பின்னர், அம்பாந்தோட்டையிலுள்ள மத்தல ராஜபக்ச அனைத்துலக விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
சட்டவாளர்களின் பிரசன்னமின்றி ஒப்புதல் வாக்குமூலம் வழங்குவதற்கு அனுமதித்தல் உள்ளடங்கலாக பல்வேறு மாற்றங்களைக் கொண்டுள்ள, சிறிலங்கா அரசாங்கத்தால் தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள புதிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் தொடர்பாக ஐ.நா அதிருப்திகளை வெளியிட்டுள்ளதாக சிறிலங்காவிற்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதி உனா மக்காலி தெரிவித்தார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் 8ஆம் நாள், ரூபா 500 மற்றும் ரூபா 1000 நாணயத்தாள்கள் செல்லுபடியற்றன என அறிவிக்கப்பட்டதன் பின்னர், நாட்டின் பொருளாதாரத்தை எண்ணியல் (டிஜிற்றல்) மற்றும் பணமில்லா பொருளாதாரமாக மாற்றுவதற்கான இந்தியாவின் முயற்சி தொடர்பில் பெரும்பாலான இந்தியர்கள் கவனத்தைக் குவித்திருந்தனர்.
‘காலி கலந்துரையாடல்’, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு மற்றும் கடற்படை ஆகியன இணைந்து நடத்திய ஒரு வருடாந்த அனைத்துலக கடல்சார் கருத்தரங்கு ஆகும். கடந்த மாதம் கொழும்பில் இடம்பெற்ற ஏழாவது காலி கலந்துரையாடலானது ‘கடல்சார் கூட்டுப் பங்களிப்பு தொடர்பான மூலோபாயத்தை மேம்படுத்துதல்’ என்ற எண்ணக்கருவை அடிப்படையாகக் கொண்டிருந்தது.
‘பசுபிக் பிராந்தியத்தை அமெரிக்கா மீள்சமப்படுத்தும். இந்திய-ஆசிய-பசுபிக் பிராந்தியத்திலுள்ள எமது நண்பர்கள் மற்றும் கூட்டணி நாடுகளுடன் எமது கூட்டுப் படையானது மிக நெருக்கமாகப் பணியாற்றும். கோரிக்கை விடுக்கப்பட்டால் பரந்த இந்திய-ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்க நலன்களைப் பாதுகாப்பதற்காகப் போரிடுவோம்.
சிறிலங்காவில் அரசியல் மாற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்புத் தொடர்பாக வாக்குறுதிகளை வழங்கியதன் மூலம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற ஆச்சரியமூட்டும் தேர்தலில் அதிபர் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றார்.