மேலும்

செய்தியாளர்: திருக்கோணமலைச் செய்தியாளர்

சிறிலங்காவின் வாக்குறுதிகளை வைத்து மட்டும் முடிவுகள் எடுக்கப்படாது – அமெரிக்க அதிகாரி

சிறிலங்காவின் வாக்குறுதிகளை மட்டும் வைத்து முடிவுகளை எடுக்கமாட்டோம், அதன் செயற்பாடுகள் மற்றும் அடைவுகளை வைத்தே அது தீர்மானிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மனித உரிமைகள், ஜனநாயகம், தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி.

கடற்புலிகளின் படகுகள், ஆயுதங்களை பார்வையிட்ட மைத்திரி – டோறாவிலும் உலாவந்தார்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று திருகோணமலை கடற்படைத் தளத்தில், விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட படகுகள், மற்றும் ஆயுதங்களைப் பார்வையிட்டதுடன், கடற்படையின் அதிவேக தாக்குதல் படகு மூலம் துறைமுகத்தையும் சுற்றிப் பார்வையிட்டார்.

கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் விபரம் நாளை அறிவிப்பு – இரா.சம்பந்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களாக நியமிக்கப்படவுள்ளவர்களின் விபரங்களை நாளை வெளியிடப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

சம்பூரில் மீளக்குடியேறிய மக்களுக்கு காணிஉரிமை சான்றிதழ்களை வழங்கினார் மைத்திரி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று பிற்பகல் திருகோணமலை சம்பூருக்கு பயணம் மேற்கொண்டு, மீளக்குடியேறிய குடும்பங்களுக்கு காணி உரிமைப் பத்திரங்களை வழங்கினார்.

தமிழ் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவோம் – இரா.சம்பந்தன் உறுதி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது தமிழ் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை எப்போதும் காப்பாற்றுவோம் என்று தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

திருகோணமலையில் இரா.சம்பந்தன் வெற்றி

திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்  இரா.சம்பந்தன் 33,834 விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியுள்ளார்.

ஐ.நா அறிக்கை சிறிலங்காவில் அரசியல் அழுத்தங்களை கொடுக்கும் – சம்பந்தன்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் வெளியிடப்படவுள்ள அறிக்கை, சிறிலங்காவில் அரசியல் ரீதியான அழுத்தங்களைக் கொடுக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

குறுக்குவழியில் கூட்டமைப்பைத் தோற்கடிக்க சதி – ஆயிரக்கணக்கில் சிக்கிய போலி வாக்குச்சீட்டுகள்

நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் கடுமையான போட்டி உருவாகியிருக்கின்ற நிலையில், கந்தளாயில் உள்ள ஐதேக வேட்பாளர் ஒருவரின் செயலகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான போலி வாக்குச்சீட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

புலிகளின் குண்டுகள் துளைத்த காருடன் திருமலைக்கு பரப்புரை செய்ய வந்த சரத் பொன்சேகா

ஜனநாயக கட்சியின் தலைவரும் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியுமான, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, இன்று திருகோணமலையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

திருமலை ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார் வண. அன்ரனி நோயல் இம்மானுவெல் ஆண்டகை

திருகோணமலை மறைமாவட்ட ஆயர் வண. அன்ரனி நோயல் இம்மானுவெல் ஆண்டகையின் திருநிலைப்படுத்தல் நிகழ்வு இன்றுகாலை திருகோணமலையில் இடம்பெற்றது.