மேலும்

செய்தியாளர்: திருக்கோணமலைச் செய்தியாளர்

ஐ.நா அறிக்கை சிறிலங்காவில் அரசியல் அழுத்தங்களை கொடுக்கும் – சம்பந்தன்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் வெளியிடப்படவுள்ள அறிக்கை, சிறிலங்காவில் அரசியல் ரீதியான அழுத்தங்களைக் கொடுக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

குறுக்குவழியில் கூட்டமைப்பைத் தோற்கடிக்க சதி – ஆயிரக்கணக்கில் சிக்கிய போலி வாக்குச்சீட்டுகள்

நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் கடுமையான போட்டி உருவாகியிருக்கின்ற நிலையில், கந்தளாயில் உள்ள ஐதேக வேட்பாளர் ஒருவரின் செயலகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான போலி வாக்குச்சீட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

புலிகளின் குண்டுகள் துளைத்த காருடன் திருமலைக்கு பரப்புரை செய்ய வந்த சரத் பொன்சேகா

ஜனநாயக கட்சியின் தலைவரும் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியுமான, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, இன்று திருகோணமலையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

திருமலை ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார் வண. அன்ரனி நோயல் இம்மானுவெல் ஆண்டகை

திருகோணமலை மறைமாவட்ட ஆயர் வண. அன்ரனி நோயல் இம்மானுவெல் ஆண்டகையின் திருநிலைப்படுத்தல் நிகழ்வு இன்றுகாலை திருகோணமலையில் இடம்பெற்றது.

வட, கிழக்குத் தமிழர்கள் வாக்குகளை ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டும் – சம்பந்தன் அழைப்பு

தமிழரின் இலட்சியத்தை விரைவில் அடைவதற்கு, அடுத்தமாதம் 17ஆம் நாள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், தமிழர் தாயகத்தில் உள்ள  அனைத்துத் தமிழ்மக்களும் தமது வாக்குகளை ஆயுதமாக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

20 ஆசனங்களைப் பெறுவதன் மூலம் தீர்வுக்கான பேரம்பேசும் சக்தியை பெறமுடியும் – இரா.சம்பந்தன்

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 20 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டால், ஏனைய இனத்தவர்களும், ஆட்சியாளர்களும் சர்வதேசமும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக, தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வொன்றைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

சம்பந்தனிடம் தேசியப் பட்டியல் ஆசனம் கோரும் மூதூர் முஸ்லிம்கள்

கிழக்கில், மட்டுமன்றி வட-கிழக்கிலும் கூட முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக ஏற்றுக் கொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகவே இருக்கிறது என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பின் திருகோணமலை வேட்பாளர் பட்டியலில் சம்பந்தன், துரைரட்ணசிங்கம், யதீந்திரா

திருகோணமலை மாவட்டத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கியுள்ளது. 

திருகோணமலை மைதானப் புதைகுழியில் இதுவரை 10 எலும்புக்கூடுகள் மீட்பு

திருகோணமலை மக்கெய்சர் மைதானத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட புதைகுழி அகழ்வின் போது, ஆறு மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து. இதுவரை மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது.

திருகோணமலையில் சிறிலங்கா அதிபருக்கு கடற்படை படகுகளின் அணிவகுப்பு மரியாதை

முப்பதாண்டுகால தீவிரவாதத்தை தோற்கடிப்பதில், முக்கிய பங்காற்றிய சிறிலங்கா கடற்படைக்கு, நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் முக்கிய பங்கு இருப்பதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.