மேலும்

செய்தியாளர்: திருக்கோணமலைச் செய்தியாளர்

வடக்கு,கிழக்கு இணைந்த ‘சமஸ்டி’ கட்டமைப்பின் கீழ் அதிகாரப்பகிர்வு – சமூக அபிவிருத்தி ஆய்வு நிறுவனம்

புதிய அரசியலமைப்பில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த, ஒரு தனி அலகு என்னும் அடிப்படையில் ‘சமஸ்டி’ கட்டமைப்பின் கீழ் அதிகாரப் பகிர்வு இடம்பெற வேண்டும் என்று, சமூக அபிவிருத்தி ஆய்வு நிறுவனம், யோசனை ஒன்றை சமர்ப்பித்துள்ளது.

அனைத்துலக மட்டத்தில் சிறிலங்கா படைகளுக்கு பயிற்சி வாய்ப்பு – கடற்படையினரிடம் மைத்திரி உறுதி

உலகின் முன்னேறிய நாடுகளில் கிடைக்கும் புதிய தொழில்நுட்ப அறிவைப் பெற்றுக் கொள்ளும் வகையில், முப்படையினருக்கும் மேலதிக பயிற்சிகளை அனைத்துலக  மட்டத்தில், பெற்றுக் கொடுப்பதற்கான வாய்ப்புகளை தமது அரசாங்கம் கண்டறியும் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

பிரதேசங்களுக்கிடையில் சமமான பொருளாதார வாய்ப்புக்கு அடித்தளமிட வேண்டும் – அமெரிக்க அதிகாரி

சிறிலங்காவில் பிரதேசங்களுக்கிடையில் சமமான பொருளாதார வாய்ப்புகளுக்கு அடித்தளம் இடப்பட வேண்டும் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அடிநிலைச் செயலராகப் பொறுப்பேற்கவுள்ள, தூதுவர் தோமஸ் சானொன் தெரிவித்துள்ளார்.

சென்னை வெள்ளத்துக்கு பலியானோரின் சடலங்கள் திருகோணமலைக் கடலில் மிதக்கின்றன?

திருகோணமலைக் கடலில் சடலங்கள் மிதப்பதாக மீனவர்கள் வழங்கிய தகவலை அடுத்து, சிறிலங்கா கடற்படையும், காவல்துறையும் இணைந்து நேற்றிரவு முதல் தேடுதல்களை நடத்தி வருகின்றன.

14 ஆண்டுகளுக்குப் பின் ஊர்காவற்றுறை தாக்குதல் வழக்கு – 2 ஈபிடிபியினருக்கு விளக்கமறியல்

2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைக்காக தீவகத்துக்குச் சென்ற, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பான வழக்கு, 14 ஆண்டுகளுக்குப் பின்னர் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்களான 2 ஈபிடிபியினரை விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

திருகோணமலையில் நடந்த கி.பி.அரவிந்தன் பற்றிய ‘சொல் யாராக இருக்கலாம் நான்’ நூல் அறிமுகம்

ஈழ விடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரும், எழுத்தாளரும் கவிஞருமான, கி.பி.அரவிந்தன் அவர்கள் பற்றி, பாலசுகுமாரால் தொகுக்கப்பட்ட ‘சொல் யாராக இருக்கலாம் நான்’ நூல் அறிமுக நிகழ்வு நேற்று மாலை திருகோணமலையில் இடம்பெற்றது. 

திருகோணமலையில் நாளை ‘சொல் யாராக இருக்கலாம் நான்’ நூல் அறிமுக நிகழ்வு

ஈழ விடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரும், எழுத்தாளரும், கவிஞருமான கி.பி.அரவிந்தன் பற்றிய நினைவுப் பதிவுகளின் தொகுப்பான – ‘சொல் யாராக இருக்கலாம் நான்’ – நூல் அறிமுக நிகழ்வு நாளை திருகோணமலையில் இடம்பெறவுள்ளது.

தமிழ் மக்கள் விரும்பாத எந்த தீர்வையும் ஏற்கமாட்டோம் – இரா.சம்பந்தன் உறுதி

தமிழ்மக்கள் விரும்பாத எந்தத் தீர்வையும் தாம் ஏற்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்.

சிறிலங்காவின் வாக்குறுதிகளை வைத்து மட்டும் முடிவுகள் எடுக்கப்படாது – அமெரிக்க அதிகாரி

சிறிலங்காவின் வாக்குறுதிகளை மட்டும் வைத்து முடிவுகளை எடுக்கமாட்டோம், அதன் செயற்பாடுகள் மற்றும் அடைவுகளை வைத்தே அது தீர்மானிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மனித உரிமைகள், ஜனநாயகம், தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி.

கடற்புலிகளின் படகுகள், ஆயுதங்களை பார்வையிட்ட மைத்திரி – டோறாவிலும் உலாவந்தார்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று திருகோணமலை கடற்படைத் தளத்தில், விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட படகுகள், மற்றும் ஆயுதங்களைப் பார்வையிட்டதுடன், கடற்படையின் அதிவேக தாக்குதல் படகு மூலம் துறைமுகத்தையும் சுற்றிப் பார்வையிட்டார்.