முன்னாள் போராளிகள் இருவருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை
வில்பத்து சரணாலயத்தில், எட்டு சிறிலங்கா படையினரைக் கொன்றார்கள் என குற்றம்சாட்டப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகள் இருவருக்கு 25 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வில்பத்து சரணாலயத்தில், எட்டு சிறிலங்கா படையினரைக் கொன்றார்கள் என குற்றம்சாட்டப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகள் இருவருக்கு 25 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கான ஆலோசனைகளை வழங்குவதற்காக, பிலிப்பைன்ஸ் நிபுணர்கள் குழுவொன்று சிறிலங்காவுக்கு வரவுள்ளது.
சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவை படுகொலை செய்தது யார் என்று தனக்குத் தெரியும் என்றும், ஆனால் அதற்கு ஆதாரம் இல்லை என்றும் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி அதிபர் வேட்பாளரை அறிவித்த பின்னரே, தமது தரப்பு வேட்பாளர் யார் என்பதை அறிவிப்போம் என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் விரைவில் கையெழுத்திடப்படவுள்ள பாதுகாப்பு உடன்பாடு, சிறிலங்காவின் தேசிய பாதுகாப்பு, பிராந்திய ஒருமைப்பாடு, இறைமை ஆகியவற்றின் மீது மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சுய வரலாற்று நூல் சீன மொழியில் வெளியிடப்பட்டுள்ளது.
மத்தல விமான நிலையத்தை அமைப்பதற்காக மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் சீனாவிடம் பெறப்பட்ட கடன், இந்தியாவின் விமான நிலைய அதிகார சபையின் உதவியுடன் மீளச் செலுத்தப்படவுள்ளது.
கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள சிறிலங்காவுக்கு, 300 மில்லியன் டொலர் கடனை வழங்குவதற்கு சீன வங்கி (Bank of China) முன்வந்துள்ளது.
சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து, அடுத்த நாடாளுமன்ற அமர்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேள்வி எழுப்பவுள்ளது.
கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள சிறிலங்கா அரசாங்கம், இந்தியாவின் மத்திய வங்கியிடம் இருந்து 1 பில்லியன் டொலரை நாணயப் பரிமாற்றத்தின் ஊடாகப் பெற்றுக் கொள்வதற்கான பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளதாக, பதில் நிதியமைச்சர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.