மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

போர்க்குற்றச்சாட்டில் இருந்து பாதுகாக்கும் வசதிகளை கைவிடுகிறார் கோத்தா

போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து சிறந்த பாதுகாப்பை அளிக்கக் கூடியதாக இருந்த போதும், அமெரிக்க குடியுரிமையை கைவிடுவதற்கு கோத்தாபய ராஜபக்ச முடிவெடுத்திருந்தார் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கோத்தாவுக்கு எந்த நீதிமன்ற அறிவித்தல்களும் கிடைக்கவில்லை – நாமல்

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமை தொடர்பான எந்த அறிவித்தல்களும் அவருக்கு வழங்கப்படவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

‘மித்ரசக்தி-6’ கூட்டுப் பயிற்சி நிறைவு

இந்திய- சிறிலங்கா இராணுவத்தினருக்கு இடையில் இரண்டு வாரங்களாக நடந்து வந்த ‘மித்ரசக்தி’ கூட்டுப் பயிற்சி நேற்று நிறைவடைந்தது.

அம்பாந்தோட்டையின் பாதுகாப்பு சீனாவிடம் வழங்கப்படாது சிறிலங்கா திட்டவட்டம்

கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பு மற்றும் செயற்பாடுகள் எந்தவொரு நாட்டுக்கும் வழங்கப்படாது, அதனை சிறிலங்காவே கையாளும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அரசியலமைப்பு சபை உறுப்பினர் நியமனம் – சம்பந்தனுக்கு அறிவிக்கப்படவில்லை

அரசியலமைப்பு சபையின் உறுப்பினராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நியமிக்கப்பட்டமை தொடர்பாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்று இரா.சம்பந்தனின் ஊடகச் செயலாளர் ரகு பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஐ.நா குழுவினர் சிறிலங்கா மனித உரிமை ஆணைக்குழுவுடன் சந்திப்பு

சிறிலங்காவில் பயணம் மேற்கொண்டுள்ள சித்திரவதைக்கு எதிரான ஐ.நா உபகுழுவின் பிரதிநிதிகள்  சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவை நேற்று சந்தித்துள்ளனர்.

சிறிலங்கா பாதுகாப்பு செயலருடன் ஐ.நா குழு சந்திப்பு

ஐ.நா அமைதிகாப்புப் படையின் காவல்துறை தெரிவு மற்றும் ஆட்சேர்ப்பு பிரிவின் தலைவர் அடா யெனிகுன் தலைமையிலான ஐ.நா அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்கா வந்துள்ளது.

45 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது வரவுசெலவுத் திட்டம்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில், 2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம், 45 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது. நேற்று மாலை நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் வரவுசெலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 119 வாக்குகளும், எதிராக 74 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

அட்மிரல் கரன்னகொடவிடம் இதுவரை 25 மணி நேரம் விசாரணை

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவிடம் நேற்று நான்காவது தடவையாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணை நடத்தப்பட்டது.

சுன்னாகம் நீர் மாசு – 20 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்க நொதேர்ன் பவர் நிறுவனத்துக்கு உத்தரவு

சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியதாக குற்றம்சாட்டப்பட்ட, நொதேர்ன் பவர் நிறுவனத்தை, 20 மில்லியன் ரூபா இழப்பீடு செலுத்துமாறு உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.