மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

தொங்கு நாடாளுமன்றம் அமையும் – சிறிலங்கா அரச புலனாய்வுச் சேவையின் கணிப்பு

வரும் நாடாளுமன்றத் தேர்தல் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும், ஐதேகவுக்கும் இடையில் கடும் போட்டியாக அமையும் என்றும், எனினும், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காது என்றும், சிறிலங்கா அரச புலனாய்வுச் சேவை அளித்துள்ள அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

குறுகியகாலப் பிரதமர் பதவியைக் கோருகிறார் மகிந்த – கௌரவமாக விலகப் போகிறாராம்

வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச, கௌரவமாக அரசியலை விட்டு வெளியேறுவதற்கு அனுமதிக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் ராஜபக்ச குடும்பத்தினர் கோரியுள்ளதாக ‘சத்ஹண்ட’ சிங்கள வாரஇதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

வசீம் தாஜுதீன் கொலை தொடர்பாக விரைவில் யோசித ராஜபக்சவிடம் விசாரணை

சிறிலங்கா ரக்பி அணி வீரர் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பாக சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகனும், சிறிலங்கா கடற்படை அதிகாரியுமான லெப். யோசித ராஜபக்சவிடம் விரைவில் விசாரணை நடத்தப்படவுள்ளது.

மைத்திரி அணியினரை தோற்கடிக்க நரிகளாக மாறி ஊளையிடும் மகிந்த அணியினர்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவாளர்களைத் தோற்கடிக்க, அவர்களின் பரப்புரையை ஊளையிட்டுக் குழப்பும் புதிய உத்தியை மகிந்த ராஜபக்ச அணியினர் கையாளத் தொடங்கியுள்ளனர்.

அதிகாரப்பகிர்வு – ஒரே நாளில் குத்துக்கரணம் அடித்தது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி

ஆட்சியமைத்து ஆறு மாதங்களுக்குள்- 13வது திருத்தச்சட்டத்தின் கீழ் மாகாணங்களுக்கு அதிகாரங்களை அளித்து, தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாக வாக்குறுதி அளித்திருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஒரே நாளில் அந்த நிலைப்பாட்டில் இருந்து குத்துக்கரணம் அடித்துள்ளது.

மகிந்தவின் களுத்துறைக் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக மகிந்த சமரசிங்க அறிவிப்பு

களுத்துறையில் எதிர்வரும் ஓகஸ்ட் 3ஆம் நாள் நடக்கவுள்ள, மகிந்த ராஜபக்ச பங்கேற்கும் பரப்புரைக் கூட்டத்தில் தாம் பங்கேற்கப் போவதில்லை என்று நிதி இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளருமான மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

மகிந்தவின் மற்றொரு சதித்திட்டத்தை தோற்கடித்தார் மைத்திரி

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து, நீக்குவதற்கு மகிந்த ராஜபக்ச ஆதரவுத் தரப்பினர் மேற்கொண்ட முயற்சிகளை முறியடிக்கவே, ராஜித சேனாரத்ன உள்ளிட்ட ஐந்து பேரை கட்சியில் இருந்து இடைநிறுத்தும் முடிவை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகின.

ராஜித, அர்ஜுன, ஹிருணிகா உள்ளிட்ட 5 பேரை சுதந்திரக் கட்சியில் இருந்து நீக்கினார் மைத்திரி

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் போட்டியிடும், நான்கு அமைச்சர்கள் உள்ளிட்ட ஐந்து பேரை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து  இடைநிறுத்தியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிளவை வெளிப்படுத்திய தேர்தல் அறிக்கை வெளியீடு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் அறிக்கை இன்று கொழும்பில் இன்று நடந்த நிகழ்வில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவினால் வெளியிடப்பட்டது.

தமிழர் மூலம் பொருளாதாரத்தை அழிக்க முயற்சியாம் – இனவாத பரப்புரையில் சரத் என் சில்வா

தமிழர் ஒருவரை மத்திய வங்கியின் ஆளுநராக நியமித்து நாட்டின் பொருளாதாரத்தை ஒழிக்க, முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இனவாதப் பரப்புரையில் இறங்கியுள்ளார் சிறிலங்காவின் முன்னாள் தலைமை நீதியரசர் சரத் என்.சில்வா.