மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

யாழ்ப்பாணத்தில் 7 ஆசனங்களையும் கைப்பற்றும் கூட்டமைப்பு – சுமந்திரன் நம்பிக்கை

வரும் 17ஆம் நாள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள 7 ஆசனங்களையும் கைப்பற்றும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார், கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.

மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா குறித்து விசாரணை நடக்கிறது- சிறிலங்கா இராணுவப் பேச்சாளர்

வெள்ளை வானில் மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவின் கைத்துப்பாக்கி கைப்பற்றப்பட்டது தொடர்பாக, புலனாய்வு பிரிவு விசாரணைகளை நடத்தி வருவதாகவும், அது முடிந்த பின்னர், தமது விசாரணை அறிக்கையை வெளியிடுவோம் என்றும் சிறிலங்கா இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்துள்ளார்.

வெள்ளைக்கொடி விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும் – ராஜித சேனாரத்ன

வெள்ளைக்கொடி ஏந்தி வந்தவர்கள் கொலை செய்யப்பட்டிருந்தால், அல்லது கடத்தி கொலை செய்திருந்தால் அதுபற்றி உள்ளக விசாரணையில் ஆராயப்படும் என்று சிறிலங்கா அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனரத்ன தெரிவித்தார்.

பிரகீத்தை கடத்திய இரு இராணுவப் புலனாய்வாளர்கள் கைது

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவைக் கடத்திச் சென்ற சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர்களான இரு தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவராக பதவியேற்கிறார் அதுல் கெசாப் – செனட் ஒப்புதல்

சிறிலங்காவுக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த அதுல் கெசாப் (வயது 44) நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனத்துக்கு அமெரிக்க செனட் நேற்று அங்கீகாரம் அளித்துள்ளது.

சிறிலங்காவுக்கு சுற்றுலாப் பயணிகளை அனுப்புவதில் இந்தியாவை முந்தியது சீனா

சிறிலங்காவுக்கு சுற்றுலாப் பயணிகளை அனுப்புவதில் இதுவரை முன்னணி வகித்து வந்த இந்தியாவை, முதல்முறையாக சீனா பின்தள்ளியிருக்கிறது. கடந்த ஜூலை மாதம், சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்ட சுற்றுலாப் பயணிகளில் சீனர்களே முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.

சிறிலங்கா ஒற்றையாட்சி நாடாகவே இருக்க வேண்டும் – என்கிறார் மைத்திரி

எதிர்கால சவால்களை முறியடிப்பதற்காக, சிறிலங்கா ஒரு ஒற்றையாட்சி நாடாகவே இருக்க வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தமிழர்களால் ஆக்கிரமிக்கப்படுகிறது வட மாகாணம் – சிங்களவர்களை உருவேற்றுகிறார் சங்கநாயக்கர்

யாழ்ப்பாணத்தில் நிலைமை மோசமடைந்துள்ளது. அங்கு வரும் சிங்களவர்கள் தாக்கப்படுகின்றனர். இது தொடருமானால் வடமாகாணம் தமிழர்களின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகிவிடும் என்று சிங்கள பௌத்தவர்களுக்கு இனவெறியூட்டியிருக்கிறார் வடமாகாண சங்க நாயக்கர் வண. நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸ தேரர்.

மகிந்த அரசு இந்தியாவைப் புறக்கணித்து செயற்படவில்லையாம்- அனுர யாப்பா கூறுகிறார்

முன்னைய மகிந்த ராஜபக்ச அரசாங்கம் இந்தியாவைப் புறக்கணித்து செயற்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் அனுர பிரியதர்சன யாப்பா.

மகிந்தவை மின்சார நாற்காலிக்கு கொண்டு செல்ல முனைகிறது கூட்டமைப்பு – டிலான் பெரேரா

போர்க்குற்றங்களுக்காக மகிந்த ராஜபக்சவைத் தண்டிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், அனைத்துலக சமூகமும் முயற்சிப்பதாகவும், அவரை மின்சார நாற்காலிக்குக் கொண்டு செல்லும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளரான முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா.